districts

img

வீட்டுமனை பட்டா வழங்கிடுக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மனு

நாமக்கல், ஏப்.3- வீடற்ற மாற்று திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா  வழங்க வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சங்கத்தினர் திங்க ளன்று நாமக்கல் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் மனு அளித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநி லம் தழுவிய அளவில் வீட்டுமனை இல்லாத மாற்றுத்திறனாளி களுக்கு வீட்டு மனை கேட்டு மனு வழங்கும் இயக்கம் திங்க ளன்று  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8  தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை கேட்டும், காலி  நிலத்தில் வீடு கட்டி கொடுக்க வேண் டும். மாற்றுத்திறனாளிகள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, இந்த மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்க  மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், ஏ.ரங்கசாமி மற் றும் சங்க நிர்வாகிகள் என்.சக்திவேல், பராசக்தி,ராணி, சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர். முன்னதாக, மனு வழங்கும் நிகழ்வில், மொத்தமாக எட்டு மையங்களில் 350  மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.