சேலம், மார்ச் 2- மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க மறுக்கும் வங்கிகளை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் பெத்தநாயக்கன் பாளையம் யூனியட் கமர்சியல் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வங்கிகளில் சுயதொழில் தொடங்கு வதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முன்னிலையில் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்ட முகாமில் பங்கேற்ற மாற் றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப் பட்ட போதும் தன்னம்பிக்கையோடு தங்களின் வாழ்வாதாரங்களை பாது காத்துக் கொள்ள மானிய வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிக் குட்பட்ட பகுதிகளில் யூனியட் கமர்சி யல் வங்கி மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஆகிய வங்கிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியத்தில் வங்கி கடன்கள் வழங்காமல் அலை கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதனை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான சங்கம் சார்பில் சங்கத்தின் தாலுகா செயலாளர் பி.பாரதி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேலும், வங்கி மேலாளர் கள் மாற்றுத்திறனாளிகளை அவமா னப்படுத்தும் நோக்கத்தில் பேசுவ தும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மாற் றுத்திறனாளியானவர்கள் தன்னம் பிக்கையோடு வாழ முயற்சி செய்யும் போது இது போன்ற வங்கி அதிகாரி களின் செயல் மாற்றுத்திறனாளி களை மேலும் காயப்படுத்தும். வங்கி யில் கடன் கொடுக்கின்ற பணம் அரசு உடையது. அதிகாரிகளின் சொந்த பணமல்ல எனவே கடன் கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அவமானப் படுத்தக் கூடாது என முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன், மாவட்ட பொருளாளர் எம்.கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஏ.கந்தன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.காளி தாஸ், எஸ்.சுமதி, விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரங்கசாமி, ஆத்தூர் தாலுகா செய லாளர் டி.அழகுவேல், கெங்கவல்லி தாலுகா செயலாளர் வி. சின்னதுரை, மாதர் சங்க தாலுகா செயலாளர் கே. பெருமா உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.