districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒரே நாளில் நான்கு போக்சோ வழக்குகளில் கைது

மூன்று பேர் ஆசிரியர் என்பதால் அதிர்ச்சி

பொள்ளாச்சி, ஜூலை 30- அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசி ரியர்கள் இருவர் போக்சோ சட்டத் தில் கைது செய்து சிறையில் அடைக் கப்பட்டனர். ஒரே நாளில் நான்கு போக்சோ வழக்குகளில் மூன்று ஆசி ரியர்கள் கைது செய்யப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த தொண்டா முத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், கோட் டூர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்களுக்கு ஏதாவது தொந்தரவுகள் இருந்தால் தங்க ளிடம் கூறினால் தகுந்த நடவடிக்கை  எடுக்கப்படும் என காவல் துறையி னர் தெரிவித்தனர். அப்போது துணிச் சலாக வந்த ஒரு மாணவி பள்ளியில் பணியாற்றும் ராமகிருஷ்ணன் மற் றும் பாலச்சந்திரன் ஆகிய இரு ஆசிரி யர்கள் அடிக்கடி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து பெண்  குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியர்கள் பாலி யல் சீண்டல் நடவடிக்கையில் ஈடுபட் டது உறுதியானது. இதனையடுத்து கோட்டூர் காவல் நிலையத்திற்கு தக வல் அளித்த அதிகாரிகள் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட்டனர். இதனைத்தொடர்ந்து ஆசி ரியர்கள் இருவரையும் போக்சோ சட் டத்தின் கீழ் கைது செய்து கோவை  போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டத்தில் வெள்ளி யன்று ஒரே நாளில் நான்கு பேர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டதும், அதில் மூன்றுபேர் ஆசிரி யர்கள் என்பதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 3.55 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், ஜூலை 30- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா மூல னூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ரூ. 3.55 கோடிக்கு பருத்தி ஏலம்  போனது. இதில், கலந்து கொண்ட வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை தரத்தின் அடிப்படையில் ஏலம் எடுத்தனர்.

மினி லாரியில் குட்கா கடத்தல் தொப்பூர் சுங்கச்சாவடியில் இருவர் கைது

தருமபுரி, ஜூலை 30- நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் சுங்கச்சாவடியில் பல  லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்தி வந்த இருவரை போலீ சார் கைது செய்தனர்.  பெங்களூரில் இருந்து குட்கா மூட்டைகள் சேலத்தை நோக்கி கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டம், தொப் பூர் சுங்க சாவடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண் டைனர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது சரக்கு  எதுவும் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. இதனால் சந்தே கமடைந்த போலீசார் லாரியில் உள்ளே ஏறி பார்த்த போது ரக சிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை உடைத்து  பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா  போதை பொருள் மூட்டைகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை ஓட்டி வந்த வேலூர் பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா (30), மாற்று ஓட்டுநரான பயாஸ் அகமது (32) ஆகியோரை கைது செய்தனர்.

பள்ளி மைதானத்தில் தேங்கிய மழைநீர்: போராட்ட அறிவிப்பினால் சீரமைப்பு பணி

திருப்பூர், ஜூலை 30 -  உடுமலை ஊராட்சி ஒன்றியம் குரல்குட்டை பள்ளியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இது போன்ற  நிலை ஏற்படுவதை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத தைக் கண்டித்து, ஏற்கெனவே பலமுறை பேசியும் மனுகொ டுத்தும் பலனில்லை. எனவே மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை  பள்ளி வளாகத்தில் மண் கொட்டும் பணி துவங்கியது.  போராட்டமே தீர்வு என்பதை இது உணர்த்தியுள்ளது. அரசுப் பள்ளிகளை பாதுகாக்க அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க  முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

உணவு தானியத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பு: பள்ளிபாளையத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 30 - உணவுப் பொருட்கள் மீது வரிவிதிப்பை கண்டித்து பள்ள பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உடுமலை  ஒன்றிய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. பள்ளபாளையம் கட்சிக் கிளைச் செயலாளர்கள் பி. எஸ்.சுந்தரம், ரத்னகுமார் முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,  கமிட்டிஉறுப்பினர்கள் எம்.ரங்கராஜ், சு.தமிழ்த்தென்றல் ஆகி யோர் பேசினர்.  இதில் கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.சித்ரா, கே.மகேஷ் வரி, கிளைச்செயலாளர்கள் குரல்குட்டை தட்சினாமூர்த்தி, ஜல்லிபட்டி மாணிக்கவாசகம், தளி சுப்பிரமணியன், பெரிய  வாளவாடி ராஜு, சாலையூர் கார்த்திக்குமார், எரிசினம்பட்டி  மணிக்குமார்,தேவனூர்புதூர் ஆறுச்சாமி,ஆலாம்பா ளையம் சிவசுப்ரமணி, மற்றும் கொடிங்கியம் ரத்னசாமி தளி கருப்புசாமி மயிலம்மாள், பானுமதி,கல்பனா , சிவக்குமா,  இமான், புரட்சிநாதன்,ஆனந்தன், நாகராஜ், பெருமாள்சாமி, கருப்புசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கமிட்டி உறுப்பினர் குமரகுரு நன்றிகூறினார்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

திருப்பூர், ஜூலை 30 - உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் ஊராட்சி துணைத்தலைவர் தங்க மணி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு குறித்து முதலமைச்சர் உரை ஒலிபரப்பப்பட்டது. பள்ளி  வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. கொடிமரத்தை புதுப் பிப்பது, பள்ளிப் பெயர்ப்பலகையை நிலைநிறுத்துவது, சுதந் திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து பேசப்பட் டது.  தலைமையாசிரியர் கௌரி பள்ளி மேலாண்மைக்குழு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை குறித்த நேரத்தில் கூடு வதன் அவசியம்  குறித்து பேசினார். இதில் கி.கனகராஜ், மு. முருகபாரதி காயத்ரி லாவண்யா, சுப்பிரமணி, உட்பட 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியில் ஆசிரியர் உமாமகேஸ்வரன் நன்றி கூறினார்.

சுண்டக்காம்பாளையம் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்

திருப்பூர், ஜூலை 30- 200 ஆண்டு காலம் பயன்படுத்திவரும் பாதையை பதி வேட்டில் அழித்து சேதப்படுத்தி ஆக்கிரமித்துள்ள பாதையை  மீட்டுத்தரக்கோரி உடுமலை வருவாய்த் துறையினர் பல முறை பேசியும் மனுகொடுத்தும் 15நாட்களாக விவசாயி களை உடுமலைப்பேட்டை வருவாய் துறையினர் அலைய விட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. பொதுப்பாதையை மீட்டுக்கொடு என விவசாயிகள் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டம் துவங்கினர்.

தாராபுரம் கூட்டுறவு வங்கி காசாளர் தற்கொலை

தாராபுரம், ஜூலை 30-  திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கூட்டுறவு வங்கி காசாளர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  ஈரோடு ஜீவாநகரை சேர்ந்த செங்கோட்டுவேலு என்ப வரது மகன் அன்புக்கரசு (27). இவர் தாராபுரம் கூட்டுறவு வங்கி யில் கடந்த 8 மாதங்களாக காசாளராக பணியாற்றி வந்தார்.  தாராபுரம் கருணா கல்யாண மண்டபம் அருகில் வீடு எடுத்துத்  தங்கியிருந்து வங்கிக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டிற்கு வந்தவர் வீட்டில் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தாராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அணைகளின் நிலவரம் 

 

திருமூர்த்தி அணை 

நீர்மட்டம்:28.74/60அடி 
நீர்வரத்து:29கன அடி
வெளியேற்றம்:27கன அடி

அமராவதி அணை 
நீர்மட்டம்: 88.62/90அடி.
நீர்வரத்து:2312கனஅடி
வெளியேற்றம்:2145கன அடி

அரசு மருத்துவமனைகளில் ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடு: மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

திருப்பூர், ஜூலை 30 - திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் ரத்த உறைவை தடுக்கும்  மாத்திரைகள் தட்டுப்பாடு இருப்ப தால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு  அந்த மாத்திரைகளை வரவழைத்து நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு  செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண் டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட  செயலாளர் செ.முத்துக்கண்ணன் சனியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத்திற்கு அனுப்பிய கடி தத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர்  மாவட்டத்தில் ஏழை, எளிய சாமானிய  மக்கள், பிற மாவட்டங்கள், பிற மாநி லங்களைச் சேர்ந்தோர் அதிகம் வசிக் கின்றனர். திருப்பூர் தொழில் நிலைமை கடந்த சில மாதங்களாக கடும் நெருக்கடி சூழலில் உள்ளதால்,  மருத்துவத்துக்கு வரும் நோயா ளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. குறிப்பாக தனியார் மருத்துவம னைகளில் அதிக செலவாகும் நிலை யில் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை, இதர ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிகளவில் வரு கின்றனர்.குறிப்பாக ரத்த அழுத்தம்,  நீரிழிவு, இருதய நோய் சிகிச்சைக்கு  வருவோர் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இருதய நோய், நரம்பு தளர்ச்சி நோயாளிகள் ரத்தம்  உறையாமல் இருப்பதற்கு பயன்ப டுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத் திரை கடந்த காலத்தில் பற்றாக் குறை இல்லாமல் இருந்தது. தற் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மாத்திரை இல்லை, வெளியே மருந்தகங்களில் வாங்கி  கொள்ளுமாறு சொல்லி அனுப்புகின் றனர். மாத்திரை ஒன்றின் விலை ரூ. 7 க்கு மேல் இருப்பதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற முடியாத அவல நிலை தொடர்கிறது. ஒருபு றம் வேலையின்மை, மறுபுறம் வரு மான இழப்பு கடும் பாதிப்பை ஏற்ப டுத்தி இருக்கும் நிலையில் நோயா ளிகள் நிலை கவலைக்குரியதாக உள் ளது. எனவே அவசர நிலை கருதி  மனிதாபிமான உணர்வோடு அனைத்து அரசு மருத்துவமனைக ளிலும் தட்டுப்பாடு இல்லாமல் ரத்த  உறைவு தடுப்பு மாத்திரை கிடைப் பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநில நிர்வாகத்தை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செ. முத்துக்கண்ணன் கேட்டுக் கொண் டுள்ளார்.

ரூ. 3.55 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், ஜூலை -30 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா மூல னூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலா ளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ரூ. 3.55 கோடிக்கு பருத்தி ஏலம் போனது என்று கூறி னார். இந்த ஏலத்தில் 18 வணி கர்கள் பங்கேற்றனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்

கோவை, ஜூலை 30- கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து உள்ளதாகவும், தற் போது வரை 80 சதவிகித நிலங்கள் கையகப்படுத்த பட்டுள்ள தாகவும் வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக மொத் தம் 644 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. சிங்காநல்லூர், உப் பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனி டையே கையகப்படுத்த வேண்டிய நிலத்தில் 30 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும். அதேபோல் 152 ஏக்கர் நிலம் இந் திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமானது. மீதமுள்ள சுமார் 460 ஏக்கர் நிலம் சுமார் 3 ஆயிரம் பொதுமக்களுக்கு சொந்த மானதாகும். விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக கடந் தாண்டு இறுதியில் தமிழக அரசு சார்பில் ரூ.1,132 கோடி நிதி  ஒதுக்கப்பட்டது. இதில் குடியிருப்பு நிலத்துக்கு ஒரு சதுரடிக்கு ரூ.1,500 எனவும், விவசாய நிலத்துக்கு ஒரு சதுரடிக்கு ரூ.900 என இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வருவாய் துறையினர் கூறுகையில், தமிழக அரசு சார்பில் ரூ.1,132 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து நில உரிமையாளர்க ளுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு ரூ.1000 கோடி வரை நிதி வழங்கப்பட்டு 80 சதவிகித நிலங்கள் கைய கப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களை இன்னும் 3 மாதத்திற்குள் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றதும், ஒன்றிய விமான ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு, விமான நிலைய  விரிவாக்கம் துவங்கப்படும். இதன் பின்னர் கார்கோ விமானம் உள்பட அனைத்து பெரிய விமானங்களும் கோவையில் தரை யிறங்க வசதியாக தேவையான ஓடுதளம் அமைக்கப்படும், என்றனர்.