districts

img

ஹட்சன் தொழிலாளர் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு

தருமபுரி, பிப்.7- பாலக்கோடு ஹட்சன் நிறுவனத்தைக் கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தொழிலாளர்களுக்கு ஆதர வாக சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில்  நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டம், கொலசனஹள்ளி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம், சங்கம் அமைத்த காரணத்திற் காக 92 தொழிலாளர்களை வேறு மாநிலத் திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதனை எதிர்த்து ஹட்சன் தொழிலா ளர்கள் கடந்த 139 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத னைத்தொடர்ந்து தொழிலாளர் உதவி  ஆணையர், பாலக்கோடு வட்டாட்சியர் மற்றும் தருமபுரி சார் ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை யில் நிர்வாகம் அதன் பிடிவாதப் போக்கை  கைவிடாமல் இருக்கின்றது.  இந்நிலையில், காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திங்க ளன்று சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு வின் சார்பாக ரூ.10 ஆயிரம் நிதியுதவியை சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் முத்துக்குமார் வழங்கினார். இதில், சிஐடியு  மாநில துணைத்தலைவர் சந்திரன், மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட இணை  செயலாளர் ப.ஜெயக்குமார் ஆகியோர் உட னிருந்தனர்.