districts

img

சமுதாய நலக்கூடம்: அடிக்கல் நாட்டு விழா

திருப்பூர், பிப்.1- பல்லடம் அருகே பி.ஆர்.நடராஜன் எம்பி கோவை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாய  நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழ னன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்ட மன்றத் தொகுதியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் வே. கள்ளிப்பாளையம் ஊராட்சி வளையபாளையத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழனன்று நடைபெற்றது.  திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர்  வக்கீல் குமார், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அபிராமி  அசோகன் வே.கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  சாந்தினி சம்பத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி ஒன்றியச்  செயலாளர், பி.பாலன், பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர். பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.