districts

மளிகை கடையில் கொள்ளை போனதாக நாடகம் - கடை ஊழியர் கைது

கோவை, ஜன.11-  கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மளிகை கடை யில் 10  லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடிய கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் அஜீஸ் என்பவர்  மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சம்ஜீத் என்ற வாலிபர் பணிபுரிந்து வரு கிறார். உக்கடம் பகுதியில் தங்கியுள்ள சம்ஜித்  திங்களன்று  இரவு கடையை மூடிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார். இதன் பின் செவ்வாயன்று காலை கடைக்கு வந்த சம்ஜித் கடை யில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனதாக அஜீ ஸூக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சி யடைந்த அஜீஸ் உடனடியாக உக்கடம் போலீசாருக்கு தக வலளித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்ஜித் சிசிடிவி கேமிராவில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்து மறைக்க முயன்றார். இதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் சம்ஜித்தை பிடித்து விசாரித்த போது,சம்ஜித் நள்ளிரவில் கடையை திறந்து கடையில் வைக்கப்பட்டிருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதும், காலை கடையை திறந்து பணம் திருடு போன தாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்ஜித்தை கைது செய்த போலீசார் அறையில் பதுக்கி வைத்திருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக சம்ஜித்திடம் போலீ சார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.