பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.14.38 விலை நிர்ணயம்
தேயிலை சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பசுந் தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது இல்லை. ஒன்றிய அரசு பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்நிலை யில், ஒன்றிய அரசின் தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பசுந்தேயி லைக்கு விலை நிர்ணயம் செய்ய மாவட்டத்தில் விலை நிர்ணய குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இதுகுறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் கூறுகையில், 2021 ஆம் ஆண்டின் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுபாட்டு ஆணை யின்படி, பசுந்தேயிலையின் மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப் பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாத மாவட்ட சராசரி விலையாக பசுந்தேயி லைக்கு கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் 38 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை ஏலத்தில் வாங்கும் தேயிலை தொழிற்சாலை கள் உற்பத்தி செய்த சிடிசி தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சராசரி விலையை மாவட்டத்திலுள்ள அனைத்து வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என்றார்.
உதகை, செப்.2- குன்னூர், கோத்தகிரியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் பச்சை தேயிலை மக சூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ள தாக தேயிலை தோட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காய்கறி விளைச்சல் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக தேயிலை விவசாயத்தை நம்பி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ள னர். இவர்களின் பெரும்பாலோனோர் சிறு விவசாயிகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை யோடு சேர்ந்து கடும் பனிமூட்டம் காணப்படு கிறது. இத்தகைய காலநிலையால் தேயிலை கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேயிலை தோட்ட விவசாயி கள் கூறுகையில், தேயிலை விவசாயத்திற்கு காலநிலை மிக முக்கியமானது. குளிர் பகுதி யாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் போதிய சூரிய வெப்பமும் இருக்க வேண்டும். தற்போது சூரிய வெளிச்சம் இல்லாததால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை இந்த நோய் தாக்கு வதாகவும், இதன்காரணமாக பச்சை தேயிலை உற்பத்தி சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ள தாக கவலை தெரிவித்தனர்.