districts

img

பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துக!

கோவை, ஆக. 27- பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றார் நல அமைப்பினர் செவ்வா யன்று கோவை மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள அரசு போக்கு வரத்து தலைமை பணிமனை முன்பு  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தேர்தல் காலத்தில் தமிழக முதல்வர் அளித்த தேர்தல் கால  வாக்குறுதியை நிறைவேற்ற வேண் டும். நீதிமன்ற தீர்ப்புகளை முழுமை யாக அமுலாக்க வேண்டும். 2022 டிசம்பர் முதல் பணப்பலன்கள் வழங்கவும், இதர துறைகளைப் போல் மருத்துவ காப்பீடு வழங்க  வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். பென்சன் திட்டத்தை அரசே  ஏற்று நடத்து வேண்டும். தனியார்  மயத்தையும் ஒப்பந்த நியமன  முறையையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் செவ்வாயன்று கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் சாலையில் உள்ள போக்கு வரத்து தலைமை பணிமனை முன்பு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, மாவட்ட  துணைத் தலைவர் பி.வேலுச்சாமி  தலைமை வகித்தார். சங்க மாநில துணை பொதுச் செயலாளர் பி. செல்வராஜன், துணைச் செயலா ளர் ஆர்.சேதுராமன், பொருளாளர்  கிருஷ்ணராஜ், ஈரோடு மாவட்டத்  தலைவர் ஜெகநாதன், செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் வாழ்த்தி  பேசினர். எஸ்இடிசி மாநில துணைத் தலைவர் பி.சுரேந்திரன், மாநில செயலாளர் சி.எம்.சண்முகம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இந்த மறியல் போராட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து  ஓய்வூதியர்கள் திரளானோர் பங் கேற்றனர்.