districts

img

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு

கோவை, பிப்.20- திருப்பூரை சேர்ந்த ஒரு வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவ தியடைந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மூச்சுக்குழாயில் சிக் கியிருந்த மிளகுதான் மூச்சுத் திணறலுக்கு காரணம் என்பதை கண்டறிந்து, அந்த மிளகை அகற்றி சிகிச்சையளித்து நல மடையச்செய்தனர் அரசு மருத்துவர்கள். திருப்பூரைச்  சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று  மூச்சு திணறல் காரண மாக கோவை அரசு மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக் கப்பட்டது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. மூச்சு குழாயில் அயல் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி பார்த்த பொழுது  மூச்சுக் குழாயில்  மிளகு சிக்கி  இருப்பது உறுதி செய்யப்பட் டது.  அந்த குழந்தைக்கு மூச் சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை யின்றி மிளகு அகற்றப்பட் டது. தக்க சமயத்தில் அளித்த சிகிச்சையினால் குழந்தை யின்  உயிர் காப்பாற்றப்பட் டது.  இந்த சிகிச்சையை, கோவை அரசு மருத் துவமனை மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர், மருத்துவர். சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் கள் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்து வக்குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை செய்து முடித்தனர். மருத்துவக்கல்லூரி மருத் துவமணை முதல்வர் பேராசிரியர் அ.நிர் மலா, மருத்துவக் குழுவினரை பாராட்டினர். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைக ளுக்கு திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டால்  தாமதமின்றி மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும், என்றார்.