districts

img

ஆபத்தான நிலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு

உதகை, ஆக.28– உதகை ராஜ்பவன் அருகே பொதுப் பணித்துறை மற்றும் காவல் துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் சிதிலம டைந்திருப்பதால் அரசு ஊழியர்கள் அச் சத்துடன் குடியிருந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை ராஜ் பவன் அருகே, பொதுப்பணித்துறை கட் டுப்பாட்டில் உள்ள குடியிருப்பில், பல் வேறு துறை சார்ந்த அரசு ஊழியர் களின் 35 குடும்பங்கள் குடியிருந்து வரு கின்றனர். மேலும், காவல் துறைக்கு சொந்தமான குடியிருப்பில், 10 குடும்பங் கள் உள்ளனர். பழமையான இந்த குடியி ருப்புகளை போலீஸ் மற்றும் பொதுப் பணித்துறையினர்  பராமரிக்காமல் விட் டதால் குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் உள்ளது.  இங்குள்ள, பழமை வாய்ந்த, 45  குடியிருப்புகளை சம்மந்தப்பட்ட துறை யினர் தொடர்ந்து பராமரிக்காமல் விட்ட தால், குடியிருப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும், இங்கு  வசிப்பவர்கள் குடிநீருக்கு 3 கி.மீ, தொலை வில் உள்ள ராஜ்பவன் சோலைக்கு வன விலங்கு தொல்லைக்கு இடையே, சென்று ஊற்று நீரை எடுத்து வந்து பயன் படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். குடியிருப்புகளை புதர் சூழ்ந்ததால் விஷ ஜந்துக்கள் தொல்லை அதிக ரித்துள்ளது. சிறுத்தை, கரடி, காட்டெருமை தொல் லையால் இரவு பணிக்கு சென்று திரும் பும் போலீசார், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வெளியே வரும் மக் கள் பீதியுடன் வரவேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற கால் வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே  தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நடைப்பாதைகள் ஆங்காங்கே உடைந் துள்ளன. ஓட்டு வீட்டின் மேற்கூரை ஆங் காங்கே உடைந்திருப்பதால் மழை சம யத்தில் ஒழுகி வருகிறது.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறு கையில், ஒரு சில அரசு ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக குடியிருந்து  வருகின்றனர். தற்போது, இங்குள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் என்பது அறவே இல்லை. குடியிருப்பு களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சம்மந்தப்பட்ட துறை அதி காரிகளுக்கு பல முறை புகார் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந் நேரத்தில் என்னாகுமோ என்ற அச்சத் திலேயே குடியிருந்து வருகிறோம். அதி காரிகள் உடனடியாக ஆய்வு மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.