கோவை, ஆக.28- இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அரசாணை 293யை உடனடியாக நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங் கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணை 293 (சுகாதார குடும்ப நல திட்டம்)யை உடனடியாக நடைமுறைப் படுத்த வலியுறுத்தியும், அரசாணை யில் அறிவிக்கப்பட்டுள்ள உதவித் தொகை மற்றும் ஊதிய உயர்வு அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்து வர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்தபடி அரசு மருத்துவர் கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ரவிசங்கர் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபெற்ற போராட்டத்தில் திரளான மருத்துவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்டோர் கூறுகையில், கொரோனா பெருந் தொற்று மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் பணியாற்றிய தங்களை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் பதவியேற்ற சில நாட்களிலேயே 293 அரசாணையை வெளியிட்டார். ஆனால், இந்த அரசாணை தற்போது வரை அமல் படுத்தப்படவில்லை. மேலும், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்து வர்கள் இடையிலான ஊதிய நிலை களில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி அரசு மருத்துவர்களின் கால முறை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள் ளது. எனவே, தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலம் முறை ஊதியத்தை வழங்க வேண்டும். இந்த அரசா ணையை அமல்படுத்த பல்வேறு நிலை களில் வலியுறுத்தியும், இரண்டு ஆண்டு கள் ஆகியும் இதுவரையிலும் உரிய பலன்கள் கிடைக்கவில்லை. ஆகவே போராட்டத்தை தீவிரப்படுத்த உள் ளோம், என்றனர்.