தாராபுரம், நவ. 18- தாராபுரத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் விவசாயியின் குடும்பத் திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது. தாராபுரம் பொன்னிவாடி பஞ்சாயத் திற்குட்பட்ட எல்லப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் விவசாயி சோமசுந் தரம் (55). இவர் கடந்த 26 அக்.2015 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலை யில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கோவையிலி ருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து சோமசுந்தரத்தின் மீது மோதி யது. இதில் பலத்த அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மூல னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இறந்த சோமசுந்தரத்தின் மனைவி பழனாத் தாள், மகன் சிவகுமார் ஆகியோர் சார் பில் தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப் பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கடந்த ஆண்டு நவ.12 ஆம் தேதி இறந்த சோமசுந்தரத் தின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரத்து 80 நஷ்ட ஈட்டுத் தொகையாக கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டார். நீதி மன்ற உத்தரவுபடி கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈட்டு தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் சார் பில் மீண்டும் தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதி பதி (பொறுப்பு) ஸ்ரீகுமார் ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் அரசு போக்கு வரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவுபடி நீதி மன்ற ஊழியர்கள் தாராபுரம் பேருந்து நிறுத்ததில் ஈரோட்டில் இருந்து பழனி செல்வதற்காக வந்த அரசு போக்கு வரத்து கழக பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினார்கள்.