அவிநாசி, அக்.20- அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். திருப்பூர் அருகே பொங்கலூர் அரசு உதவி பெறும் பள்ளி யில் மாவட்ட அளவிலான கபடி போட்டி புதனன்று நடை பெற்றது. இதில் நடைபெற்ற கபடி போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட் டிக்கு தேர்வு பெற்றனர். மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவர்கள் யாகவராஜ், கவின் ஆகியோர் வெற்றி பெற்று மாநில அளவி லான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட் டோருக்கு தலைமையாசிரியர் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினர் கார்த்தி, உதவித் தலைமையாசிரியர்கள், ஆசிரி யர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.