districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மலை ரயிலை யானைகள் மறிப்பு

நீலகிரி, ஏப்.28- குன்னூர் மலை ரயிலை காட்டுயானைகள் மறித்ததால் அரை மணி நேரம் தாமதமாக சென்றது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால், கடும் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் நோக்கி படையெ டுக்கத் துவங்கியுள்ளன. மேலும், குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனை ருசிக்க யானைகள் வருகை  அதிகரித்துள்ளது.  இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில்  பாதையில் காட்டுயானைகள் ரயில் தண்டவாளத்தில் முகா மிட்டுள்ளது. வெள்ளியன்று காலையில் குன்னூர் நோக்கி  வந்த மலை ரயிலை மறித்தது. உடனடியாக, ரயில்வே ஊழி யர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் மலை ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்றது. இதை யடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி

கோவை, ஏப்.28- கோவை அருகே வெள்ளமலை டாப் அக்காமலையில் உள்ள அரசு நிதி உதவி பெறும்  தொடக்க பள்ளியை கடந்த 3  நாட்களாக பூட்டியிருப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.  கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி அக்கா மலை 4வது பகுதியில் இயங்கி வருகிறது. வால்பாறை பகுதியில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி 85 பள்ளியில் இயங்கி வருகிறது. இந்நிலையில், எந்தவித அறிவிப்பு பலகையின்றி பள்ளி பூட்டப்பட்டுள்ளது. மேலும்  தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற வில்லை. இந்நிலையில், இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருப்பதி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள தால் தலைமறைவு ஆகிவிட்டதாலும், அப்பள்ளியின் உதவி  ஆசிரியர் ஏப்ஸிபா வால்பாறையில் எண்ணும், எழுத்தும் பயிற்சிக்கு சென்றுள்ளார். இதற்கு மாற்று ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் பள்ளி 3 நாட்களாக  பூட்டப்பட்டது. இதுகுறித்து, வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரிக்கு பல முறை தெரிவிக்கப்பட்டும், மாற்று ஆசிரியரோ அல்லது எதனால் பூட்டப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் தெரிவிக் கப்படவில்லை.   எனவே, மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக தலையீடு  செய்து, ஆண்டு தேர்வு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தெரி வித்துள்ளனர்.

மதுக்கடை விடுமுறை

ஈரோடு, ஏப்.28- ஈரோடு மாவட்டத்தில் மே  தினத்தை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மது பானக் கடைகள், பார்கள், கிளப்கள் மற்றும் ஹோட்டல் களில் உள்ள பார்கள்  ஆகியவை மூடப்பட்டி ருக்கும். அன்றைய தினம் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது. அதனையும் மீறி மே 1 ஆம் தேதியன்று மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான  நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் மாசுபாட்டை தடுக்க தானியங்கி கருவி - ஈரோடு மாவட்ட ஆட்சியர்

ஈரோடு, ஏப்.28- ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா மற்றும்  துறைவாரியான அலுவலர்கள், விவசாயிகள் மற்றும்  விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக் களை அளித்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். அதற்கு துறைவாரியான அலுவலர்கள் பதிலளித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ண னுண்ணி பதில் கூறியதாவது, பவானி ஆற்றில் தண்ணீரின்  தரத்தை ஆய்வு செய்ய தானியங்கி கருவி பொருத்தி, ஆன்லைனில் விவரங்களை பெறும் வகையில் விரைவில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அதேபோல காலிங்கராயன் வாய்க்காலிலும் தண்ணீர் மாசு கண்காணிக்க நடவடிக்கை யெடுக்கப்படும் என்றார். மேலும், கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு வருவதற்கு  சில நாள்களுக்கு முன்னர் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை என  விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டுறவுத்துறை அதிகாரி களிடம் பேசி அடுத்த கூட்டத்திற்குள் விவரம் தெரிவிக் கப்படும்.  பாசன வாய்க்கால், நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு களை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரடியாக  ஆய்வு செய்து காலதாமதம் செய்யாமல் அகற்ற வேண்டும்  என்று விளக்கமளித்தார்.

திருடப்பட்ட செல்போன்கள் மீட்பு

கோவை, ஏப்.28- கோவை மாநகர பகுதியில் பொதுமக்களி டமிருந்து திருடப்பட்ட செல்போன்கள்  மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு  வெள்ளியன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.  நிகழ்வைத் தொடர்ந்து காவல் ஆணையர்  வெ.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, செல்போன் கொள்ளை வழக் கில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலத்திலிருந்து 120 செல்போன் மீட்கப்பட்டு, உரியவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39  லட்சமாகும். மேலும், பீளமேடு கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவிச் சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு  56  சவரன் நகை, ரூ.25 லட்சம், இரண்டு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு இன்னோவா கார்  பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை  விடுமுறை என்பதால் பலர் ஊருக்கு  செல்வார்கள். எனவே, வெளியூர் செல்ப வர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கோவை மாநகரில் குற்ற வாளிகளை கண்காணிக்க “ஆக்டோபஸ்” எனும் புதிய மென் பொருள் செயலி அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ் ஆப்  குழுவில் மூலம் தகவல் பரிமாறப்பட்டன. இதன் பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பது தெரியாது. எனவே முக்கியமான தகவல்கள் இந்த செயலி மூலம் அனுப்ப லாம். சாதி, மத சம்பவங்கள் தடுப்பிற் கும், ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில்  ஈடுபட்டவர்களை கண்காணிக்கவும் ஏதுவாக இருக்கும். ஆக்டோபஸ் செயலி முதல் முறை யாக கோவையில் தான் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. உளவு பிரிவிவினர் மட்டுமே  உபயோகிக்கும் வகையில்  இது வடிவமைக் கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஆய்வு

கோவை, ஏப்.28- வால்பாறை அரசு மருத்துவமனையில் வெள்ளியன்று பொள்ளாச்சி சார்ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  கோவை மாவட்டம், வால்பாறை அரசு  மருத்துவமனையில் வியாழனன்று வால் பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  35 மாணவ, மாணவிகள் மதிய உணவு மற்றும்  சத்து மாத்திரை சாப்பிட்டு உள்ளனர். இதில் 25  மாணவ, மாணவிகளுக்கு மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறினர். இதனையறிந்த, தலைமை யாசிரியர், அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  இதன் காரணமாக வெள்ளியன்று வால் பாறை அரசு மருத்துவமனையில் பொள் ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வால்பாறை  வட்டாட்சியர் ஜோதிபாசு, துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வால்பாறை அரசு மருத்துவமனை பொது மருத்துவர் மகேஷ் ஆனந்தி,  செவி லியர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் 3  மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களு டைய உடல் நலத்தை விசாரித்து பெற்றோர் களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த குறிஞ்சிமலர் என்பவர் பிரசவத்திற்கு பின்பு உயிரிழந்த நிகழ்வைப் பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி குறிஞ்சி மலரின் மருத்துவ பதி வேட்டை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனைக்கு தேவைப் படும் முக்கிய உதிரி பாகங்கள், எது தேவை  என கூறினார். அதற்கு வால்பாறை பகுதி யில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் மருத்துவர், லேப் டெக்னீசியன், இரவு காவ லர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட வேண்டும் என மகேஷ் ஆனந்தி வலியுறுத் தினார். இதற்கு உடனடியாக தீர்வு காணப் படும் என மாவட்ட சார் ஆட்சியர் உறுதிய ளித்துள்ளார்.

மே 1: தொழிற்சாலைகளை இயக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.28- மே 1 ஆம் தேதி சட்டவிரோதமாக தொழிற்சாலைகளை இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சிஐடியு பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் சார்பில்  தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.  சிஐடியு பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கப்  பொதுச் செயலாளர் ஜி.சம்பத் வெள்ளியன்று அளித்துள்ள  மனுவில் கூறியிருப்பதாவது, மே முதல் நாள் ஒவ்வொரு ஆண் டும் தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ் நாடு அரசும் மே நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் திருப்பூரில் சில பனி யன் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கா மல் சட்ட விரோதமாக இயக்க முயற்சிப்பதாக தெரியவருகி றது. எனவே வரும் மே 1 ஆம் தேதி பனியன் தொழிற்சாலை கள் இயக்க அனுமதிக்க கூடாது எனவும், மீறி சட்ட விரோத மாக இயங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மின்சாதனப் பொருள்கள் சேதம்: முதல்வருக்கு புகார் மனு

அவிநாசி, ஏப்.28- சேவூர் அருகே கிளாகுளம் பகுதியில் குறைந்த அழுத்த  மின் விநியோகத்தால், மின்சாதனப் பொருள்கள் சேதமடைகி றது என அப்பகுதி மக்கள் முதல்வருக்கு இணையம் மூலம்  புகார் மனு அளித்துள்ளனர். தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் அளித்த புகார்  மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி  வட்டம் சேவூர் ஊராட்சி கிளாகுளம் பகுதியில் 150 குடும்பங் களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் மிகவும்  குறைந்த அளவு மின்சாரம் விநியோகிப்பதால், வீடுகளில் பயன்படுத்தும் தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ், மின்விசிறி,  கிரைண்டர், மிக்ஸி ஆகியவை  அடிக்கடி பழுதாகிறது. தற் போதைய கோடை காலத்தில் மின்விசிறி கூட இயங்காமல்  குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி றோம். குறிப்பாக தெரு விளக்குகள், வீட்டு மின்விளக்குகளில்  வெளிச்சம் வருவதில்லை. ஆகவே போதுமான மின் விநியோ கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தாராபுரம், ஏப்.28 - தாராபுரத்தில், தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்கு தலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது. தாராபுரம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி சுமார் 4 ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. தென்னையில்  சுருள் வெள்ளை ஈ தாக்குதலைத் தொடர்ந்து விவசாயிகளி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு முகாம் நடத்த  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி சுருள் வெள்ளை  ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் ஊத்துப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இம்மு காமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் லீலாவதி தலைமை  வகித்தார். பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையப் போராசிரி யர் ரங்கசாமி கலந்து கொண்டு விவசாயிகளிடம் பேசுகையில்,  தென்னை மரங்களைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை  மஞ்சள் ஒட்டுபொறி வைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒட் டுண்ணிகளை விடுவதின் மூலமும், இரவு நேரங்களில் 7 மணி  முதல் 11 மணி வரை விளக்குப் பொறி மூலமும் கட்டுப்படுத்த லாம். மேலும் தென்னையில் சிவப்பு வண்டு கட்டுப்பாடு, காண் டாமிருக வண்டு கட்டுப்பாடு, குருத்து அழுகல் நோய் கட்டுப் பாடு பற்றியும், தென்னை மரங்களுக்கு ஒருங்கிணைந்த ஊட் டச்சத்து நிர்வாகம் முறை பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அலுவலர்கள் பேசுகையில் தென்னை மரம் ஒன் றிற்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா 1500 கிராம், சூப்பர்  பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3 கிலோ 500 கிராம், தென்னை  நுண்சத்து 1 கிலோ என உரங்களை மரத்திலிருந்து 3 அடி  தள்ளி வட்ட வடிவில் இட்டு காய்ப்பு திறனை அதிகப்படுத்து வது குறித்தும் குரும்பை உதிர்வது குறித்தும் எடுத்துரைத்த னர். லும் பென்சில் டாப் நுண்சத்து குறைபாடு மரங்களை கண் டறிந்து நுண்சத்து இட பரிந்துரை செய்து தென்னை சாகுபடி  விவசாயிகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.  இம்முகாமில் தாராபுரம் பகுதி விவசாயிகள், தாராபுரம்  விதைச்சான்று அலுவலர் மனோஜ்குமார், தாராபுரம் துணை  வேளாண்மை அலுவலர் சின்னதம்பி, உதவி வேளாண்மை அலுவலர் யாஸ்மின் பிவி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

உலக பூமி தினம்: மரக்கன்றுகள் வழங்கல்

திருப்பூர், ஏப்.28 - சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மைய அலுவல கம் முன்பு உலக பூமி தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  முன்னதாக, மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திருப் பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோர்  கோடை வெயிலை தணிக்கும் விதமாக பொது மக்களுக்கு நீர்  மோர் பந்தல் துவக்கி வைத்து, மோர் மற்றும் தர்பூசணி பழங் களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் துணை மேயர் ரா.பால சுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

சிறுமியை ஏமாற்றிய குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டு சிறை

திருப்பூர், ஏப்.28- திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரை சேர்ந்த வர் கோகுலகண்ணன் (21). இவர் 13 வயது சிறுமியை திரு மணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல்  பலாத்காரம் செய்திருக்கிறார். இதில் அந்த சிறுமி கர்ப்பமா னார். இதகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் கடந்த ஆண்டு  உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, கோகுலகண்ணனை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட  மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் புத னன்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி பாலியல்  வன்கொடுமை செய்த குற்றத்துக்காக கோகுலகண்ணனுக்கு 20  ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம்  விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அரசு சார்பில் வழங்கவும் பரிந்துரைக் கப்பட்டது.

திருப்பூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

திருப்பூர், ஏப்.28 -  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்  பகர்மான கழகம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதாரத் துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டுவளர்ப்புத் துறை ஆகிய  துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித் தும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்தும்,  சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக் கைகள் குறித்தும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும்  வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறையின் சார்பில் 29 மாற்றுத்திறனாளிக ளுக்கு தலா ரூ.83,500 வீதம் ரூ.24.21 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா பெட் ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி னார்.

குவைத்தில் உடல்நலம் குன்றி தவிக்கும் தாய்:  மீட்டு தர திருப்பூர் ஆட்சியரிடம் மகள் மனு

திருப்பூர், ஏப்.28 - திருப்பூரில் இருந்து வீட்டு வேலைக்காக குவைத் நாட்டிற்குச் சென்று உடல்நிலை சரி யில்லாமல் தவிக்கும் தாயை மீட்டு, இந்தியா  அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவ ரது மகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். திருப்பூர், அனுப்பர்பாளையம் மாரியம் மாள் கோயில் வீதியைச் சேர்ந்த பர்வீன் என்ப வரின் தாய் ஜெயப்பிரியா. வீட்டு வேலைக் காக கடந்த ஜனவரி மாதம் குவைத் நாட்டிற்கு  சென்றுள்ளார். கடந்த மாதம் தொடர்பு கொண் டபோது உடல்நிலை சரியில்லாமல் இருப்ப தாக மகள் பர்வீனாவிடம் கூறியுள்ளார். மேலும், சொந்த ஊர் வர குவைத் நாட்டில் உள்ள வீட்டின் உரிமையாளர் அனுமதி மறுத் ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 10 ஆம்  தேதி பர்வீனா மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தார்.  இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குவைத் நாட்டில் உள்ள ஜெயப்பிரியாவை தொடர்பு கொள்ள முடியவில்லை, எனவே தனது தாயின் நிலையை தெரிந்து கொள்ள  வேண்டும், உடனடியாக அவரை இந்திய  அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி பர்வீனா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து மாநில அரசின் கவனத் துக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதி இருக் கிறார்.

தருமபுரி: போலி மருத்துவர் கைது

தருமபுரி, ஏப்.28- தருமபுரி அருகே போலி மருத்துவரை கைது செய்த அதி காரிகள், மருந்தகத்தை மூடி சீல் வைத்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சரக்கரை ஆலை எதிரே மருந்தகம் வைத்து, அதன் ஒரு பகுதியில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த ராதாகிருஷ்ணன் (48) என்பவர் கைது செய்யபட்டுள்ளார். தொடர்ந்து க்ளினிக்கை யும் மூடி மருத்துவ அதிகாரிகள் சீல் வைத்தனர். கைதாகி யுள்ள ராதாகிருஷ்ணன், எலக்ட்ரோபதி படிப்பு படித்து விட்டு, மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்ததும், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் சாந்தி அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை உதவியுடன், மருத்துவ துறை அதிகாரி கள் நடவடிக்கையினை மேற்கொண்டனர். தருமபுரி மாவட் டத்தில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் குறித்த தக வல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தடுத்து நடவ டிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் மருத்துவத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

விஏஓ-வை கொலை செய்ய துரத்திய மணல் கடத்தல் நபர்

சேலத்தில் பெரும் பரபரப்பு: விஏஓ போலீசில் தஞ்சம்

சேலம், ஏப்.28- ஓமலூர் அருகே மண் கடத்திய வாகனங் களை சிறைபிடித்தததால், கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்ய, மணல் கடத் தலில் தொடர்புடைய நபர் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள  மானத்தாள் கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார் என்பவர் பணியாற்றி வருகி றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அனு மதியின்றி மண் கடத்தியதாக மானத்தாள் பகுதியைச் சேர்ந்த சித்துராஜ் மற்றும் உப் பாரப்பட்டி, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த விஜி ஆகிய இருவர் மீதும் கனிம வளத்துறை அதிகாரிகள் புகாரளித்தனர். அதன்பேரில் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டு, மண் கடத்த பயன் படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், மானாத்தாள் கிராம நிர்வாக அலு வலராக வினோத் குமார் வழக்கம் போல் வெள்ளியன்று காலை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது தொளசம்பட்டி அருகே உள்ள கரட்டூர் பிரிவு சாலை எனும் இடத்தில் வினோத்குமாரை வழிமறித்த சித்து ராஜ், அவரை தாக்கி செல்போனை பறித்துள் ளார். தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட் டியதோடு, “உன்னை கொன்றால் இனி எந்த கிராம நிர்வாக அலுவலரும் மண் வண்டியை பிடிக்க மாட்டார்கள்” என கூறிக்கொண்டே இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்தி ருந்த அரிவாளை எடுத்து வினோத்குமாரை வெட்ட முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட வினோத்குமார் இருசக்கர வாக னத்தில் அங்கிருந்து வேகமாக தப்பி உள் ளார். ஆனால், சித்துராஜ் பின்னாலேயே அரி வாளுடன் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று விஏஓவை கொல்ல முயன்றுள்ளார். அங்கிருந்து உயிர் தப்பிக்க வினோத்குமார் அருகே இருந்த தொளசம்பட்டி காவல் நிலை யத்தில் தஞ்சம் அடைந்தார். இதைத்தொ டர்ந்து சித்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வினோத்குமார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரின்பேரில் தொளசம் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சித்து ராஜை வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக் குடியில் மணல் மாபியாக்களால் கிராம நிர் வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப் பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற் குள், சேலத்தில் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்ய அரிவாளுடன் மணல் கடத்த லில் தொடர்புடைவர் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10.98 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஏப்.28- தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு  வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங் களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த அங்காடிக்கு வியாழனன்று 2,494  கிலோ பட்டுக்கூடுகள் வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.566க்கும், குறைந்தபட்சமாக ரூ.252க்கும், சராசரி யாக ரூ.440.49க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட் சத்து 98 ஆயிரத்து 858க்கு வர்த்தகம் நடைபெற்றது.

வாணியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தருமபுரி, ஏப்.28- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணி யாறு அணையிலிருந்து பாசனத்திற்காகாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையிலிருந்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி அணையின் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலா புரம், ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை,  பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக அதிகாரப்பட்டி உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும் தண் ணீர் செல்கிறது. இந்நிலையில், அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். இத னையடுத்து இடது, வலதுபுற கால்வாய் களில் சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு தண்ணீரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அணையிலிருந்து பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விடபட்டது. இதன் மூலம் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங் கள் பாசன வசதி பெறுகிறது.

பணம் கையாடல்: ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்

நாமக்கல், ஏப்.28- ராசிபுரம் அருகே ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்தை மோசடி யாக பதிவு செய்து, பணம் கையாடல் செய்த செயலாளர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன் றியத்துக்குட்பட்டது பி.ஆயிபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவராக சத்யா என்பவர் பதவி வகித்து வருகிறார். செயலாளராக அண்ணாதுரை உள்ளார். இதனிடையே ஊராட்சி துணைத்தலைவர் சத்யா வின் கையெழுத்தை ஆவணங்களில் போலியாக பதிவு செய்து, பணம் கையா டல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சத்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் தனது கையெழுத்தை மோசடியாக பதிவு செய்து, ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை பணம்  கையாடல் செய்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் கூறி இருந்தார். இப்புகார் மனு குறித்து உரிய விசா ரணை நடத்த ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டார். அதன்பேரில் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி கள் விசாரணை நடத்தினர். அதில் பி. ஆயிபாளையம் ஊராட்சியில் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலு வலர் வனிதா, ஊராட்சி செயலாளர் அண் ணாதுரையை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகு தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து காவலர்களுக்கு சிறப்பு கண்ணாடிகள் வழங்கல்

சேலம், ஏப்.28- கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சேலம் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சியான மூக்கு கண்ணாடிகளை மாநகர காவல் ஆணை யர் விஜயகுமாரி வழங்கினார். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோடை வெயிலையும் பொருட் படுத்தாமல் சாலையில் நின்று போக்குவரத்தை சீர்படுத்தும் போக்குவரத்து காவலர்களுக்காக சேலம் மாநகர காவல் துறை பிரத்தியேக ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி கொளுத்தும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து மீளும் வகை யில் அவர்களுக்கு குளிர்ச்சியான மூக்கு கண்ணாடி, தண் ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொள்ளும் வகையில் பவுச் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் வகையில் நீர், மோர் வழங் கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடை பெற்றது. மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி பங் கேற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து போக்குவரத்துக் காவ லர்களுக்கும் தனித்தனியே குளிர்ச்சியான மூக்கு கண் ணாடிகளை வழங்கினார். தொடர்ந்து தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள பவுச்களை வழங்கினார். காவலர்கள் பணி நேரத்தில் கட்டாயம் கண்ணாடியை அணிய வேண்டும் என்றும், வெயிலின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநகர காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் விஜயகுமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாந கர காவல் துணை ஆணையர் லாவண்யா மற்றும் நன்கொடை களாளர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

சேலம், ஏப்.28- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத் தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு குழுத்தலை வரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினரு மான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமை வகித் தார். அப்போது அவர் பேசுகையில், மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண் காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு நிதி முறை யாக சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் 3  மாதங்களுக்கு ஒருமுறை அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் இந்த கூட்டம் நடத் தப்படுகிறது. இந்த கூட்டத்தில் மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,  ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட 37 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத் துக்கொள்ளப்பட்டு, அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது, என்றார். அதைத்தொடர்ந்து ஆட்சியர் செ.கார்மே கம் பேசுகையில், பொதுமக்களின் தேவை களை கருத்தில் கொண்டு சாலை வசதி, குடி நீர் வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகை யில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு  அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மூல மாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. ஒவ்வொரு துறைகளிலும் செயல் படுத்தப்படும் திட்டங்களின் இலக்குகளை யும் துறைத்தலைவர்கள் மேலும் விரைவாக மேற்கொள்ள இந்த ஆய்வு கூட்டம் உறு துணையாக உள்ளது, என்றார். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கள் அருள், சதாசிவம், மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி மற்றும் குழுவின் உறுப்பினர் கள் தேவிகா சின்னுபிள்ளை, திருநாவுக் கரசு, மணி, பரிமளா மற்றும் உள்ளாட்சி அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மண்சரிவு

உதகை, ஏப்.28- நீலகிரி, வெள்ளியங் காடு மார்க்கமானது கோவை  செல்லும் மூன்றாவது மாற் றுப்பாதையாக உள்ளது. இவ்வழித்தடத்தின் கெத்தை என்ற பகுதி, 7 ஆவது கொண்டை ஊசிவளைவில் மண் திட்டுகள் சரிந்தன.  மேலும், மரங்கள் விழுந்த தால் ஏராளமான வாகனங் கள் சாலையில் அணிவகுத் திருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.