districts

img

வரம்புகளை மீறும் ஆளுநர்: ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

தருமபுரி, நவ.5- சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங் குவதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்து, வரம்பு மீறி செயல்படும் தமிழ்நாடு  ஆளுநருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள  வாச்சாத்தி கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வந்திருந் தார். அங்கு பாலியல் வன்கொடுமை சம்பவத் தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய பின்னர், அரூரில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசியதாவது: சமீபத்தில் நடந்த ஐநா மாநாட்டில் 120 நாடுகள் ஒருங் கிணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் பேரில், இஸ்ரேல் - காசா போரை நிறுத்த வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த தீர்மானத் தின் வாக்கெடுப்பின்போது, இந்திய அரசாங் கம் வாக்களிக்காமல் சென்றது கண்டனத்திற் குரியது. மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்க மோடி அரசு, வேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக மின்துறையில், எல்லா மாநில அரசுகளையும் ஸ்மார்ட் மீட் டர் பொறுத்த வலியுறுத்தியுள்ளது. இது நடை முறைக்கு வந்தால் கணக்கெடுப்பு என்பது இருக்காது. ஸ்மார்ட் மீட்டர் அடிப்படையில் தனியாரே கணக்கெடுத்து கட்டணத்தை தீர் மானிப்பார்கள். இதனால் ஏழை, எளியவர் கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், விசைத் தறி, கைத்தறி தொழில் செய்பவர்கள் போன்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 3 வித மான நேரத்தை வைத்து காலை மற்றும்  மாலையில் உச்சபட்சமாகவும், பிற்பகலில் ஒரு கட்டணமாகவும், இரவு தூங்கும் வேளை களில் ஒரு கட்டணமாக அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆளும் கேரளம் அரசு அம லாக்க முடியாது என முடிவெடுத்துள்ளது. அதுபோல் தமிழ்நாடு அரசும் அறிவிக்க வேண் டும். இதனை வற்புறுத்தி வரும் நவ.15 ஆம் தேதியன்று முதல் எல்லா மாவட்டங்களிலும் பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் கிறித்தவர்களை ஆர்எஸ்எஸ் தரப்பினர் தாக்கி, இரு தரப்பினர் இடையே ஒரு மத  மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத் தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து  வரும் நவ.9 ஆம் தேதியன்று மத நல்லிணக் கம் - மக்கள் ஒற்றமை என்ற பெயரில், ஜனநா யக கட்சிகள் சார்பில் பொதுகூட்டம் நடை பெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போட்டுள்ளார். அதேபோல் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் உள்ள மாநில அமைச்சர்கள் வீடுகளில், புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்ப டுத்தி ரெய்டு நடத்துவது வன்மையாக கண் டிக்கத்தக்கது. மேலும், சுதந்திரப் போராட்ட  வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் கையெழுத்திட மறுத்துள்ளார். வரம்பு மீறி செயல்படும் ஆளுநரை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக, இந்த பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச் சுணன், ஒன்றிய செயலாளர் பி.குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.