districts

img

தமிழர் நலனுக்கு விரோதமான ஆளுநர்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஏப்.11- தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர் வாகத்திற்கு வக்காலத்து வாங்கியும், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்களை சமூகவிரோதிகள் போல சித்தரித் தும், துப்பாக்கிச் சூட்டில், பலியான அப்பாவி மக்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தியும் பேசி வருகிறார். தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிக்க கூடாது, வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன இயக்கத்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதன்ஒருபகுதியாக, தருமபுரியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் தரும புரி நகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை ஏற்றார். இதில், மாநிலக்குழு உறுப் பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், எஸ்.கிரைஸாமேரி, ஆர்.மல்லிகா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உரையாற்றினர்.  தமிழ்நாட்டிற்கும், உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து அவதூறாக பேசிவரும் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.