கோவை, செப். 8- பல்கலைக்கழக துணைவேந் தர் நியமனத்தில் ஆளுநர் அடா வடியாக நடந்து கொள்வதாக குற் றம்சாட்டி, இந்திய மாணவர் சங்கத் தினர் கோவையில், பாரதியார் பல் கலைக்கழகம் முன்பு வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல் கலைக்கழகங்களில் துணைவேந் தரை தேர்வு செய்வதற்கு முதல் முறையாக பல்கலைக்கழக மானி யக்குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்து தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அறிவித்துள்ளார். இது வரை தமிழ்நாட்டில் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப் பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே இருந்து வந்த நிலை யில், தற்போது நான்காவதாக பல் கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினர் ஒருவரும் சேர்த்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந் திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, கோவை யில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகம் முன்பு இந்திய மாணவர் சங் கத்தினர், புதிய குழு உறுப்பினர் சேர்க்கையை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடு ஆளுநர் தமிழக அரசுடனும், உயர்கல்விதுறை அமைச்சருட னும் கலந்தாலோசிக்காமல் தன் னிச்சையாக தேடுதல் குழுவை அறிவித்துள்ளதை கண்டித்தும், தமி ழகத்தின் வரம்புகளுக்கு மாறாக வும் வரம்பு மீறிய நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுவதாகவும் குற் றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பி னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாண வர் சங்க மாநிலத் துணைத்தலை வர் தௌ.சம்சீர் அகமது தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர்கள் பிரவீன் குமார், கல்கிராஜ், மாவட்டச் செயலா ளர் அசாருதீன், மாவட்ட நிர்வாகி கள் ஆசாத், ஹரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.