districts

img

ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதிபடுத்திடுக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

சேலம், மார்ச் 4- ஊதிய ஒப்பந்தத்தை உடனே உறு திப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கத்தில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களில் வர வுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஏப்ரல்  1, 2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு கழக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வுக் கால பணப்பலன்களை வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தி னர் 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு சங்கத்தின் கோட்ட தலைவர் கே.செம்பான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, சிஐடியு சேலம் மாவட்ட செயலாளர் டி. உதயகுமார் துவக்கி வைத்தார். இதில், சங்கத்தின் கோட்ட பொது செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் சேகர், சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.முருகேசன் உள்ளிட்ட பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கத்தின் ஈரோடு மண்டல தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். இந்த போராட் டத்தில் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஜான் கென்னடி, சிஐடியு துணை தலைவர் என்.முருகையா, போக்கு வரத்து தொழிலாளர் ஓய்வுபெற்றார் அமைப்பு தலைவர் பி ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான ஊழியர்கள் அனைத்து கிளைகளிலும் இருந்து கலந்து கொண்டனர். 

கோவை

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்கு வரத்து கழக தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் பொது செயலாளர் வேளாங்கன்னிராஜ் தலைமை தாங்கி னார். தலைவர் பரமசிவம், பொரு்ளா ளர்  கோபால் , ஏ.ஜி.பாலாஜி, ஜான் கென்னடி, லட்சுமி நாராயணன் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்த  போராட்டத்தில் கலந்து கொண்டனர்.