districts

img

பேருந்து வசதி கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சேலம், ஜூலை 26- சங்ககிரி அருகே உள்ள வடு கப்பட்டி அரசு மாதிரி பள்ளிக்கு, பள்ளி வேலை நேரத்தில் வைகுந்தம் பகுதியிலிருந்து அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் புதனன்று சாலை மறிய லில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். சங்ககிரி ஊராட்சி ஒன்றி யம், வைகுந்தம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக மான மாணவ, மாணவிகள் நாள்தோ றும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். சங்ககிரியிலிருந்து ஒரு அரசு பேருந்து காலை, மாலை இரு நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. வைகுந் தம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளிலி ருந்து வரும் மாணவ, மாணவிக ளுக்கு பள்ளி வேலை நேரத்தில் அரசு பேருந்துகள் வராததால் பெற்றோர் கள் தனியார் வேன்களை வாட கைக்கு அமர்த்தி மாணவ, மாணவி களை பள்ளிக்கு அனுப்பி வருகின்ற னர். இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவு, சங்ககிரி சட்டமன்ற உறுப்பி னர், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல் வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு பேருந்துகளை பள்ளி நேரத்தில் இயக்காததால் சிரம மடைந்து வருவதாகக்கூறி 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வடு கப்பட்டியிலிருந்து வைகுந்தம் செல் லும் சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி போலீ சார் மறியலை கைவிடுமாறு மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாண வர்கள் பிரதான சாலையிலிருந்து விலகி பள்ளிக்கு செல்லும் உள்புற சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வைகுந்தம் பகுதியிலிருந்து பள்ளி வேலை நேரத் தில் அரசு பேருந்துகளை விடுவதாக உறுதியளித்தால், கலைந்து செல்வ தாக மாணவ, மாணவிகள் தெரி வித்தனர். இதைத்தொடர்ந்து சங்க கிரி உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சி.ராஜா உள் ளிட்ட அதிகாரிகள் மாணவ, மாணவி களிடம் பேச்சுவார்தைகளில் ஈடு பட்டனர். இப்போராட்டத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.