districts

img

அரசுப்பள்ளி மாணவி சிலம்ப சாதனை

அரசுப்பள்ளி மாணவி சிலம்ப சாதனை சேலம், பிப்.2- எடப்பாடி அருகே உலக அளவிலான சிலம்பம் போட்டி யில் சாதனை படைத்த நெச வுத் தொழிலாளியின் மகள், உலக அளவில் சாதனை படைக்க அரசு உதவி செய்ய  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப் பாடி அருகே கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தறி தொழிலாளி ஆறுமுகம் - சுதா தம்பதியினர் இவர்களது இளைய மகள் ரமணி. எடப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிலம் பம் போட்டியில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டி ருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக அள வில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் கோப்பையும் வென்று தமிழ கத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். கூலி வேலைக்குச் சென்று தன்னையும் தன்னுடன் பிறந்த நான்கு பேரையும் வாடகை வீட்டில் வசித்தபடி மிகுந்த சிர மப்பட்டு  எங்களை படிக்க வைக்கும் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாணவி ரமணி வாங்கிய தங்கப்பதக்கமும் கோப்பையும் பெற்றோர்களிடம் வழங்கி ஆசி பெற்றார். இதுகுறித்து ரமணி கூறுகையில், எதிர்வரும் காலங்களில் உலக அளவிலான சிலம்பம் போட்டியிலும் சர்வதேச அளவி லான சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு மேலும் பல் வேறு சாதனைகள் புரிய தனது பெற்றோரிடம் வசதி இல்லாத காரணத்தினால் அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் ஏதே னும் உதவி செய்தால் தமிழகத்திற்கும் தனது கிராமத்திற் கும் பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் பல சாதனைகள்  புரிய வாய்ப்பாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள் ளார்.