திருப்பூர், ஜன.1- கடந்த சில மாதங்களாக பின்ன லாடை உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிலோ வுக்கு ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக பின்ன லாடை தொழில் பெரும் கஷ்டத்தை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அர சுக்கு பல முறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத கார ணத்தால் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பின்ன லாடை மற்றும் அதனை சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்பு போராட் டம் மற்றும் உண்ணாவிரத போராட் டம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அனைத்து ரக நூல்களின் விலையில் 10 ரூபாய் குறைக்கப்பட் டது.
நூற்பாலைகளை பொருத்த வரை பஞ்சு விலையை அடிப்படை யாக கொண்டு மாதந்தோறும் 1 ஆம் தேதி நூல் விலையை நிர்ணயிக் கின்றன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ.50 உயர்த்தப்பட்டி ருப்பது தொழில் துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த ஓராண்டில் ரூ.100 ஏறியி ருந்த நூல் விலை, நவம்பர் மாதத்தில் தடாலடியாக அனைத்து ரகங்களுக் கும் ரூ. 50 உயர்த்தியது அனைவரை யும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில் தொழில்துறையினர் போராட்டம் காரணமாக கடந்த மாதம் ரூ.10 குறைக்கப்பட்டது. இந்த நிலை யில் புத்தாண்டு தினத்தில் நூல் விலை மீண்டும் 30 ரூபாய் அதிகரிக் கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நூல்களும் கிலோவுக்கு 350 முதல் 370 ரூபாய் வரை விலை உயர்ந்து பின்னலாடை துறையினர் அதிர்ச்சி யடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி யாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து ரத்தினம் கூறுகை யில், மாதந்தோறும் நூல் விலையா னது உயர்ந்து வருவது பின்னலாடை துறையை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். பஞ்சு விலை உயர்வை காரணம் காட்டி நூல் விலையை உயர்த்துவது நியாய மற்ற செயல். ஒன்றிய அரசு இதற்கு உடனடியாக ஒரு தீர்வு காண வேண் டும். இல்லாவிட்டால் பின்னலாடை துறையே இல்லாமல் போய்விடும். பின்னலாடைகளை நாம் ஏற்றுமதி செய்து வந்த காலம் மாறி இந்த நூல் விலை ஏற்றத்தால் நாம் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் வெகுவிரைவில் ஏற்படும், எனவே இந்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண் டும் என்றார்.