districts

img

திருப்பூரில் அரசு மருத்துவமனை தூய்மைப் பணி: வாலிபர் சங்கத்தினர் உழைப்பு தானம்

திருப்பூர், ஜூன் 5- திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத் தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உழைப்பை தானம்  செய்து தூய்மை பணி மேற் கொண்டனர். திருப்பூர் தாராபுரம் சாலை யில் மாவட்ட அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை உள்ளது. தற்போது இங்கு மருத்துவக் கல் லூரி, மருத்துவ மாணவர்களுக் கான விடுதிகள், மருத்துவமனை பிரிவுகள் என  தனித்தனி கட்டிடங் கள் உள்ளன. புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை யில் இங்கு கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகி றது. இந்நிலையில் மருத்துவ மனை வளாகத்தையொட்டியுள்ள சுற்றுப் பகுதிகளில் ஏராளமான புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அதேசமயம் ஜேசிபி இயந்திரம், புல்டோசர் ஆகிய வாகனங்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடி யாதபடி குறுகிய பகுதிகளாக உள் ளன. எனவே, ஆட்கள் உடல் உழைப்பின் மூலம் தான் இந்த இடங்களை சுத்தப்படுத்த முடியும்  நிலை உள்ளது. இதையடுத்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் உழைப்பு  தானம் செய்து மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்த முன்வந்தனர். இதையடுத்து ஞாயி றன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் தூய்மைப் பணி யில்  ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் 53 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி  மாமன்ற உறுப்பினர் ர.மணி மேகலை, 57 ஆவது மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன்,

மருத் துவ கல்லூரி பொறுப்பு மருத்து வர் வினோத் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இந்த தூய் மைப்பணி இயக்கத்தை வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட  செயலாளருமான செ.முத்துக் கண்ணன் துவக்கி வைத்தார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேக ரன், மாவட்டச் செயலாளர் மணி கண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புதர்களை வெட்டி தூய் மைப்படுத்தினர். நெடுநாட்களாக பராமரிப்பு செய்யாமல் இருந்த பகுதிகளையும் அவர்கள் சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்ட தலைவருமான கே. உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழு செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், மாநகர குழு உறுப்பினர் ஜி. பொம்முதுரை, மாவட்ட குழு  உறுப்பினர் பா.லட்சுமி உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்து தெரி வித்தனர்.  இதில் தூய்மைப் பணியில் ஈடு பட்ட இளைஞர்களுடன், மாமன்ற  உறுப்பினர்கள் கவிதா கண்ணன்,  ர.மணிமேகலை ஆகியோரும் களத்தில் இறங்கி தூய்மைப் பணி யில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாக னத்தின் மூலம் அங்கு சுத்தம் செய் யப்பட்ட குப்பைகள் புதர்கள் ஆகி யவை அகற்றி வெளியேற்றப் பட்டன. வாலிபர் சங்கத்தினரின் உழைப்பு தான சேவையில் ஈடு பட்ட இளைஞர்களை பொதுமக் கள் வெகுவாக பாராட்டினர்.