சேலம் ஜூலை 30- அரசு ஊழியர் சங்கத்தின் மேட்டூர் வட்டக்கிளை மாநாட் டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேட்டூர் வட்ட கிளை யின் 15 ஆவது மாநாடு, சி.காமராஜ் தலைமையில் மேட்டூரி லுள்ள சங்க அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. அறிக்கைகளை வட்டச் செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம், பொருளாளர் பி சதீஷ் ஆகியோர் முன்வைத்தனர். அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் பி.சண்மு கம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலை வர் ஏ.கோவிந்தராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.சுரேஷ், இணைச்செயலாளர் து.சிங்கராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து சங்கத்தின் மேட்டூர் வட்டக்கிளை தலைவராக சி.காம ராஜ், துணைத்தலைவர்களாக ஆர்.மீனாட்சி சுந்தரம், கே.என்.வெற்றிவேல், செயலாளராக து.சிங்கராயன், இணைச் செயலாளர்களாக கார்த்திகேயன், ராஜா, சண்முகம், கோகிலா, பொருளாளராக சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், இணைச்செயலாளர் கோகிலா நன்றி கூறினார்.