திருப்பூர், மார்ச் 13- பல ஆண்டுகளுக்கு பிறகு தாராபுரத்தி லிருந்து சென்னை வரை அரசு பேருந்து புதன் கிழமை முதல் இயக்கப்படுகிறது. தாராபுரம் முதல் சென்னை வரை அரசு பேருந்து கொரானா பேரிடர் காலம் வரை இயக்கப்பட்டது. கொரானா பேரிடர் முடிந்த பிறகு மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்ப டவில்லை. இதனால், பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்தில் மட்டுமே பயணிக்கும் சூழ லுக்கு தள்ளப்பட்டனர். மேலும், அரசு பேருந்து இயக்கப்படாததால் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் கட்ட ணம் விதித்தனர். வேறு வழியின்றி மக்களும் அதிக கட்டணம் செலுத்தி பேருந்தில் சென்று வந்தனர். இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை கண் டித்தும், மீண்டும் அரசு பேருந்தை இயக்க வேண்டும் என சிஐடியூ, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கம் கோரிக்கை வைத்து வந்த னர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாராபுரம் முதல் சென்னை வரை அரசு பேருந்து சேவை மாலை 7 மணிக்கு மீண்டும் இயங்க துவங்கியது. மேலும், தினந்தோறும் மாலை 7 மணிக்கு சென்னைக்கு அரசு பேருந்து இயங்கும் என்பது வரவேற்கத்தக் கத்து எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ள னர்.