districts

img

தடுப்பு சுவரில் மோதி அரசு பேருந்து விபத்து

நாமக்கல், மே 22-  பள்ளிப்பாளையத்தில் சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளா னது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து  நிலையத்திலிருந்து ஞாயிறன்று அதிகாலை ஈரோடு நோக்கி அரசு பேருந்தை ஓட்டுநர் சாமிநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதிகாலை சுமார் 6 மணியளவில் பள்ளிப்பாளையம் பகுதியில் சேலம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்பு சாலையில் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்  உள்பட பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதன்பின்னர் போக்குவரத்து மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை கிரேன் மூலம்  மீட்டனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.