ஈரோடு, மார்ச் 1- சத்தியமங்கலம் வட் டம், வட்டாட்சியர் அலுவ லகம் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போது அருகி லேயே உள்ள, ஆதி திரா விடர் நலத்துறை அலுவல கம் பாழடைந்து பரிதாப மாகக் காட்சியளிக்கிறது என்கிற புகார் எழுந்துள் ளது. ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் வட்டம், வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் ‘ஆதி திராவி டர் நலத்துறை’ அலுவலகம் உள்ளது. இங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போது அருகிலேயே உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகம், விரிசல் விழுந்த கட்டிடமாக உள்ளது. மேலும், கூரை மீது செடிகள் வளர்ந்து வேர்கள் கீழ் வரை இறங்கி யுள்ளது. பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு பாழடைந்த கட்டிடம் போல் தோற்றமளிக் கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் இடைக்கமிட்டி செய லாளர் டி.சுப்பிரமணியம் கூறுகையில், தீண் டாமை சட்டப்படி குற்றம். ஆனாலும் சமூகத் தில் இதனை முழுமையாக ஒழித்த பாடில்லை. ஒதுக்குதலின் உச்சம் பல்வேறு வடிவங்களில் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது. இதில் அரசு கட்டிடங் களும் தப்பவில்லை. உதாரணமாக சத்திய மங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் பாழடைந்துள்ளது. அரசு இதில் கவனம் செலுத்தி, நல்ல தோற் றப் பொலிவுடன் மாற்ற வேண்டும் என் றார்.