districts

img

நிரந்தர கபடி மைதானம் அமைக்க வேண்டும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை

உடுமலை, ஜூலை 26 - உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நிரந்தர கபடி மைதா னம் இல்லாததால், கல்லூரி மாணவர்கள் கூட்ட அரங்கில் கபடி பயிற்சி மேற்கொள்கின்றனர். எனவே கபடி விளையாட்டு பயிற்சி செய்ய நிரந்தர அரங்கம் அமைக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் காலை மற்றும் மாலை  வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவ,  மாணவியர்கள் பெரும்பாளானோர் கிராமப் புறங்களில் இருந்து கல்லூரிக்கு வருகிறார்கள். இக்கல்லூரியில் மிகப் பெரிய விளையாட்டு மைதானங்கள் இரண்டு உள்ள நிலை யில், கபடி விளையாட்டுக்கு என்று தனி மைதானம் இல்லை.  இதனால், கல்லூரியின் கூட்டம் நடைபெறும் வெளி அரங்கில்  மாணவர்கள் கபடி மேட் போட்டு பயிற்சி எடுத்து வருகிறார் கள். எனவே கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் நிரந்தர  கபடி பயிற்சி மைதானம் ஏற்படுத்த வேண்டும் என மாண வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.