districts

img

கொலை வழக்கு: இந்து முன்னணி பிரமுகர் மீது குண்டர் சட்டம்  

அன்னூர் அருகே சரவணசுந்தரம் என்பவரை கொலை செய்த வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.    

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சரவண சுந்தரம் என்பவர், இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  

பின்னர் சில மாதங்களுக்கு முன்பு, அவர் நிறுவனத்திலிருந்து விலகி தனியாக பைனான்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளார் சரவண சுந்தரம். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அன்று ஆட்கள் வைத்து சரவண சுந்தரத்தைக் கொலை செய்துள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜேந்திரன் உட்பட 3 பேரை அன்னூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

;