districts

மோடியின் கார்ப்ரேட் கொள்கையால் ஜொலிக்காத தங்க நகைத் தொழில் - - கோகுலகண்ணன் -

தமிழகத்தின் பெரும் தொழில் நகரில் கோவை முக்கிய இட மாகும். இங்கு சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பிருந்தே தங்க நகை தொழில் செயல்பட்டு வந்துள்ளது. இன்று நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியாவில் தங்க  நகை தொழிலில் சிறந்து விளங்கும் முதல்  மூன்று நகரங்கள் பட்டியலில் கோவை மூன் றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் உள்ளன. இந்தியாவின் மொத்த  தங்க நகை ஏற்றுமதியில் கோவை மாநகரம் 6 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளது. முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள், தங்க நகைகள் தயாரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள், தங்க கட் டிகளை வாங்கி நகை செய்து தரும் பட்டறை  தொழில் செய்வோர் என சுமார் 2 லட்சத் திற்கும் அதிகமானோர் கோவை மாவட்டத் தில் இத்தொழில் சார்ந்து உள்ளனர். இந்தி யாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிங்கப் பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் கோவை தங்க நகை தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், 2014ல் மோடி அரசு ஒன்றியத்தை ஆளும் பொருப்புக்கு வந்ததோ, அப்போதி ருந்தே கோவையின் அடையாளமான சிறு குறு தொழில் போன்று தங்கநகை தொழி லும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.  குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, தங்கம் விற்கவும், வாங்கவும் ஏற்படுத்தப்பட்ட கெடு பிடிகள் போன்றவற்றால் தங்கநகை தொழில்  சார்ந்தவர்கள் ஜொலிக்காமல் உள்ளனர். பான்கார்டு அவசியம் இதுகுறித்து கோயம்புத்தூர் தங்கநகை தொழிலாளர் யூனியன் (சிஐடியு) பொதுச் செயலாளர் சந்திரன் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகைகள் வாங்குவோர் கட்டாயம் ’பான் கார்டு’ அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மோடி அரசு கொண்டு  வந்தது. அப்போது, 85 சதவீதத்துக்கு மேலா னோரிடம் பான் கார்டே கிடையாது. அச் சமயத்தில், இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்தியது வியாபாரத்தை பெரிதும் பாதிப்படையச்செய்தது. அப்போதே, நகை  விற்பனை தொழில் 30 சதவீதம் பாதிக்கப்பட் டது. அதே சமயம் கள்ளச் சந்தை விற்பனை யும் அதிகரித்தது. இதுவே, தங்க நகை தொழி லாளர்கள் மீதான முதல் அடி. இந்த அறி விப்பிற்கு பிறகு வீழ்ந்த நகை தொழில்கள் இதன் பிறகு வளரவில்லை என்றே சொல்ல லாம். அதன்பிறகு, கலால் வரி என்ற புதிய வரி விதிப்பை இந்த பாசிச மோடி அரசு புகுத்தி யது. அதாவது, வெள்ளியை தவிர, மற்ற நகை களுக்கு கலால் வரி 1 சதவிகிதம் வரி விதித் தது, மோடி அரசின் அப்போதைய நிதியமைச் சர் அருண் ஜெட்லி இதனை அறிவித்தார். இந்த அறிவிப்பும் தங்க நகை தொழிலா ளர்களை திக்குமுக்காட செய்தது. கோவை யில் இருந்த தொழிலாளர்களுக்கு, தொழி லில் பெருத்த அடியை கொடுத்தது. இந்த  கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழு வதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் தங்க நகை தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.. 

அதுமட்டுமின்றி, கலால் வரிக்கு எதிர்ப்பு  தெரிவித்து இந்தியா முழுவதும் நகை கடை கள் ஆறு மாதங்கள் கடை அடைப்பு போராட் டம் நடத்தினர். குறிப்பாக, கோவையில், ஒரு  மாத காலம் கடைகள் திறக்காமல் போராட் டம் நடத்தினர். இதன் விளைவாக, தங்க நகை தொழிலாளர்கள் 8 மாதங்களாக வேலை இழந்து பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்த கடை அடைப்பு போராட்டத்தால், நாடு முழு வதும் பல்லாயிரம் கோடிக்கு மேல் வர்த்த கம் பாதித்து. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் கோடி வர்த்தகம் பாதித்திருக்கும். ஆனா லும், இப்போதுவரையில் மோடி அரசு இந்த  வரிவிதிப்பை மாற்றவில்லை. இதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டி வரியை ஒன் றிய மோடி அரசு கொண்டு வந்தது. மேற் குறிப்பிட்ட இரண்டு திட்டங்களே தங்கத்தின்  மீதான விலை உயர்வை அதிகரிக்கவும், மக் களிடம் வாங்கு திறனை குறைக்கவும் செய் தது. அதன்பிறகு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு மேலும், மக்களுக்கு மட்டுமின்றி தங்க நகை தொழிலாளர்களுக்கு இன்னொரு இடியாய்  விழுந்தது. இந்த வரி விதிப்பால், தங்கத்திற் கான பொதுவான தேவை குறைந்து, தங்கத் தின் விலை மேலும் உயர்ந்தது. இது தங்க  முதலீடுகளின் பணப்புழக்கத்தையும் பாதித் துள்ளது. இதன் காரணமாகவும் தொழிலா ளர்கள் பலர் வேலை இழந்தனர். ஜிஎஸ்டிக்கு முன் 10.22 சதவீதமாக இருந்த தங்கத்தின் மீதான வரிவிதிப்பு. ஜிஎஸ்டிக்கு பின் 11.08 ஆக  அதிகரித்தது. இதுவும் மக்களிடம் வாங்கும் திறனை குறைத்தது என்றார். 

இப்படி ஒன்றிய மோடி அரசின் அடுத் தடுத்த தாக்குதல் தங்கநகைத்தொழிலை கடும் நெருக்கடியில் தள்ளிய நிலையில் தான், கொரோனா பரவல் உலகை அதிர வைத்தது. இதனைத்தொடர்ந்து பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால்,  நகை சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்தது. ஏரளமான நகை பட்டறைகள் மூடப்பட்டது. தொழிலாளர்கள் சொந்த மாநி லங்களுக்கே சென்றனர்.  ஒருபுறம் உலகளாவிய பொருளாதார மாற்றத்தால் தங்கம் விலை உயர்ந்தாலும், மோடியின் தவறான பொருளாதார கொள் கையாலும், பல்வேறு வரியாலும் விலை  அதிகரிக்க முக்கிய காரணியாக அமைந்தது. இந்த நடவடிக்கையால் உள்நாட்டில் தங்கத் தின் விலை மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. ஏற்கெனவே 11 சதவீத  இறக்குமதி வரி விதிக்கப்பட்டு இருந்த சூழ லில், தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள் ளது. தங்கம் என்பது ஆபரணம் என்பதை காட் டிலும், ஏழைஎளிய உழைப்பாளி மக்கள் அது தங்களின் சேமிப்பு என்கிற வகையிலேயே தங்கத்தை வாங்குகின்றனர். மோடி அரசின்  கார்ப்ரேட் கொள்கையால், தங்கம் வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சி வளர்ச்சி என வாயில் வடை சுட்ட பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் வாக்களியுங்கள் என கேட்டு வருகிறார். இப்போது விரட்டவில்லை என் றால் இனி எப்போதும் விரட்ட முடியாது எச்ச ரிக்கை உணர்வோடு செயல்படுவோம்.

10 ஆண்டில் தங்கத்தின் விலை

கடந்த 2014 ஆண்டு தங்கத்தின் விலை ரூ.28,006 ஆக இருந்தது. தொடர்ந்து, மோடியின் ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு விலை கூடி ரூ. 26,343 ஆனது. 2016ல் ரூ.28,623 ஆகவும், 2017ல் ரூ. 29,667 ஆக வும், 2018ல் ரூ. 31,438 ஆகவும், 2019ல் ரூ.35,220 ஆகவும் உயர்ந்தது. இதைய டுத்து கொரோனா காலத்தில் 40 வரு டத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நகைகளின் விலை கடுமையாக உயர்ந் தது. அதாவது, கடந்த 2020ல் உட்ச பட்ச விலையாக ரூ.48,651த்தை தொட் டது. இதைத்தொடர்ந்து, 2021ல் ரூ.48,720 ஆகவும், 2022ல் ரூ.52,670 ஆகவும் உயர்ந்தது. இந்த நிலையில், 2023ல் தங்கத்தின் விலை ரூ. 58,385 என பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. நடப்பாண் டில் தங்கத்தின் விலை கண்டிப்பாக ரூ.70 ஆயிரத்தை தொடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். (சொக்கத்தங்கம் 10 கிராம்)