districts

img

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்கிடுக

நாமக்கல், ஜன.11- பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு கட்டுமான தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.10 ஆயிரம் போனசாக வழங்க வேண்டும். ஆன்லைன் மற்றும் நேர டியாக விண்ணப்பங்கள் பெற்று உட னடியாக உதவி திட்டங்களை வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்க ளுக்கு 55 ஆவது வயதில் பென்சன்  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டு மான தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட் டம், வெப்படை நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந் திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத் தார். இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் என்.வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்  எம்.ஆர்.முருகேசன், கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர் கண்ணையன், கிளைப் பொருளா ளர் கோவிந்தராஜ், வெப்படை கிளை நிர்வாகிகள் பழனிச்சாமி, கந்தாயி மற்றும்  கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.