திருப்பூர், ஆக.24 - நிலமிருந்தும் வீடு கட்டுவதற்கு வழியில்லாத ஏழை மக்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியிருக்க இடம் இல்லாத மக் களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உடனே வழங்க வேண்டும். இடமிருந்தும் சொந்த வீடு கட்ட இயலாத ஏழை மக்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பழுத டைந்த தொகுப்பு வீடுகளை பரா மரிப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு பணிகள், கட்டிடப் பணி களுக்கு மடை மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் தொடர்ந்து வேலை வழங்க வேண் டும், சட்டபூர்வமான தினக்கூலி ரூ. 294-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகாத் தலைவர் ஆர். மணியன் தலைமையில், ஊத்துக் குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் விவ சாயிகள் சங்கத் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சண்முகம், விவ சாயிகள் சங்க தாலுகாச் செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகாச் செயலாளர் க.பிரகாஷ், சிஐடியு இன்ஜினியரிங் சங்கப் பொருளாளர் வி.காமராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப் பட்டது. முடிவில், தாலுகா பொருளாளர் எம்.பழனிச்சாமி நன்றி கூறினார்.