ஈரோடு, நவ.2- 5:2 என்ற நடைமுறைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியல் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யராக அல்லது மாவட்ட கல்வி அலுவ லராக செல்ல விருப்பமா என உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரி டம் ஒவ்வொரு ஆண்டும் விருப் பத்தை தெரிவிக்கும் வகையில் நடை முறைப்படுத்த வேண்டும்.
5:2 என்ற நடைமுறைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் 8 பட்ட தாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் வி.சண் முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கனகராஜ் வரவேற் றார். பொருளானர் முருகேசன், அமைப்பு செயலாளர் எஸ்.வெங்க டேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மேனாள் மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.நேரு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன், முதுநிலை பட் டதாரி ஆசிரியர் சங்க மாநிலச் செய லாளர் ஏ.ஏ.அன்பரசு, மாவட்ட தலை வர் எச்.சுகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், மாவட்ட துணை தலைவர் டி.அருள்ராஜ் நன்றி கூறி னார்.