திருப்பூர், அக்.10- ஆரம்ப நிலை பால் கூட்டுறவு சங்கங் களில் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு வழங்கி வந்த லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகையை உடனே வழங்க வலியு றுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையாக கடந்த நவம் பர் மாதம் முதல் வழங்கி வந்ததை ஆவின் நிர்வாகம் கடந்த 3 மாதங்களாக நிறுத்திவிட்டது. தற்போதுள்ள சூழ் நிலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10/- விலை உயர்த்தி கொடுத்தால் தான் விவ சாயிகளுக்கு கட்டுபடியாகும். இந்த சூழ் நிலையில் தமிழக அரசும், ஆவின் நிர் வாகமும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வழங்கி வந்த ஊக்கத் தொகையை கடந்த 3 மாதமாக நிறுத்தியுள்ளது, விவசாயி களை பெரும் கவலை அடைய செய்துள் ளது. எனவே, நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண் டும். கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்குளி வட்டம், செங்கப் பள்ளி மேம்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகாத் தலைவர் மணி என்கிற சுப்பிர மணியன் தலைமை வகித்தார். இதில், விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெரியசாமி, காங்கேயம் வேலுசாமி, பள்ளத்தோட்டம் ஈஸ்வரி ஆகியோர் உரையாற்றினர். முடிவில், காடபாளையம் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.