கோபி, மே 3- விருதுநகர் மாவட்டம், காரியாப் பட்டி அருகே குவாரியில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு, தலா ரூ. 25 லட்சம் இழப் பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத் துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையத்தில் செய்தியாளர்களை சந் தித்து இரா.முத்தரசன் பேசுகையில், கோவை மாவட்டம் காரமடை அருகே செயல்பட்டு வந்த தொழிற்சாலை ஒன் றில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எதிர் காலத்தில் இது போன்ற விபத்து நடந்திடாமல் தடுக்க, அந்த தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று, விருதுநகர் மாவட் டம் காரியாப்பட்டி அருகே குவாரி ஒன்றில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத் தின் காரணமாக கடமங்கலம் பகுதியில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட வீடு கள் உட்பட பள்ளிக்கட்டிடமும் சேத மடைந்துள்ளது. அங்கு வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். அரசு இந்த விபத்து குறித்து விரி வான விசாரணை மேற்கொண்டபின், எதிர்வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்ப தற்கான நடவடிக்கையினையும் மேற் கொள்ள வேண்டும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று உரிய நிவாரணம் வழங்கப்படுமென முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம், விபத் தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரண மாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் பலியான ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு அரசு உரிய இழப்பீட்டினை வழங்கிட வேண் டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத் தார்.