நாமக்கல், ஜன.8- விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு 20 சதவிகிதம் பொங்கல் போனஸ் கேட்டு நாமக்கல் மாவட் டம் குமரபாளையம் பகுதி முழுவ தும் சிஐடியுவினர் தெருமுனை பிரச் சார இயக்கத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபா ளையத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இத்தொழி லாளர்கள் அத்துக்கூலிகளாகவே பணியாற்றி வருகின்றனர். வாங் குகிற ஊதியம் போதாமல், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டவே இவர்களின் ஊதியம் போதாத நிலையே இருக்கிறது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தொடர்ந்து சிஐடியு போராடி வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை யின்மை உள்ளிட்ட காரணங்க ளால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அரசு ஊழி யர்களுக்கு குறைந்த பட்சம் போனஸ் வழங்க தமிழக அரசு, உத்திரவாதம் செய்கிறது. ஆனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசைத்தறி பொங்கல் போனஸ் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, குமரபா ளையம் நகரம் முழுதும் சிஐடியு சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. இதில், பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்கப்பட்ட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இவ்வியக்கத்திற்கு சிஐடியு நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் மோகன், நகரச் செயலர் பாலுசாமி, நகரப் பொருளர் வெங்க டேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், ஓலப்பாளையம், சடை யம்பாளையம், சத்யாபுரி, காந்திபு ரம், உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.