districts

img

ஆணவப்படுகொலை: ததீஒமு, சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 12- தனியார் உணவக ஊழியர்  முகமது ஆசிப் ஆணவப்படு கொலையை கண்டித்து, நீதி கேட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மற்றும் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் திங்களன்று தருமபுரி மாவட்டம் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தருமபுரி மாவட்டத் தலைவர் ‌பி.ஜெயராமன் தலைமை வகித் தார். இதில், மாநில பொதுச் செயலா ளர் கே.சாமுவேல்ராஜ், மாநில  துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே. கோவிந்தசாமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு பொறுப்பாளர் ஆர்.கிரைஸாமேரி, மாவட்ட அமைப்பாளர் டி.ஏசுதாஸ், இஸ்லா மிய கூட்டமைப்பு மாவட்டத் தலைவர்  என்.சுபேதார் ஆகியோர் பேசினர்.  இதில், திரளானோர் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் பேசுகையில்: பட்டி யலின பெண்ணை காதலித்ததற் காக இஸ்லாமிய இளைஞர் முகமது ஆசிப் படுகொலை செய் யப்பட்டுள்ளார். இஸ்லாமிய இளைஞர் ஏழை என்பதால் படு கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக பட்டியலின இளைஞர்  காதலித்தால் ஆணவப்படு கொலை செய்யப்படுவார். இந்த காதல் சம்பவத்தில் இஸ்லாமிய இளைஞர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்கில் காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.  ஆணவப்படுகொலை செய்யப் பட்ட முகமது ஆசிப்பிற்கு நீதி கிடைக்க தீண்டாமை ஒழிப்பு முன் னணி சட்ட போராட்டம் நடத்தும் என் றார்.  முன்னதாக, ஆணவப்படு கொலை செய்யப்பட்ட முகமது ஆசிப்பின் குடும்பத்தினரை தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், நிர் வாகி கே.குப்புசாமி வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி கணபதி ஆகி யோர் சந்தித்தனர் அவரது குடும் பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.