districts

img

இளம்பிள்ளையில் பொது மருத்துவ முகாம்

இளம்பிள்ளை, பிப்.14- இளம்பிள்ளையில் பொது மருத்துவ முகாம் ஞாயி றன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை  பேரூராட்சியில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் அருகே தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.கே.எஸ். மருத்துவ மனை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன், இளம்பிள்ளை ஜாமியா மஸ்ஜித் ரஹ்மானியா மதரஸா இணைந்து இலவச பொது மருத்துவம் மற்றும் கண்  பரிசோதனை முகாம் ஞாயி றன்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு, தமுமுக மருத்துவ சேவை அணி தலைவர்  என். முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். இளம்பிள்ளை ஜாமியா மஸ்ஜித் பொருளாளர் எஸ்.ராஜா மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  இந்த பொது மருத்துவ முகாமை மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு துவக்கி வைத்தார். கண்  சிகிச்சை பரிசோதனை முகாமை எடப்பாடி அரசு மருத்து வமனை மருத்துவர் எம்.முஹம்மது சர்ஜி இமாம் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் இளம்பிள்ளை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்த குழந்தைகள், பெண் கள், முதியவர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ரத்த அழுத்தம், உடல் பருமன் அளவு, சர்க்கரை அளவு, இசிஜி, கண் பரிசோதனை, எலும்பு மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை, நுரையீரல், இதயம், வயிறு  சம்பந்தமான பிரச்சனைகள், பொது மருத்துவம் உள்ளிட்ட  பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், இல வசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.