கோவை, ஏப்.28- கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்ப திவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அரசு தொழில்நுட் பக் கல்லூரி சுற்றுவட்டார பகு திகள் தற்காலிக ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறக்க மாநகர காவல் துறை தடை விதித்துள் ளது. கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று முதல் அந்த பகுதி தற்காலிக ரெட் ஜோனாக கோவை மாநகர காவல் துறையால் அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பா ளையம், வடகோவை, ஆர் எஸ் புரம், பூசாரிபாளையம், சீரநா யக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூர் ஆகிய பகுதி கள் அனைத்தும் தற்காலிக ரெட் ஜோன் பகுதிகளாக அறி விக்கப்பட்டு, ஞாயிறு முதல் வரும் ஜூன் 4 ம் தேதி வரை இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட் டுள்ளது. ஒன்றிய அரசால் 2021 இல் கொண்டு வரப்பட்ட டிரோன் விதிமுறைகளில், 96 மணி நேரங்களுக்கு மட்டுமே டிரோன் கள் பறக்க தடை விதிக்க முடியும் என்ற நிலையில், ஞாயிறு முதல் மே 2 ஆம் தேதி வரை கோவை மாநகர காவல் துறையி னர் டிரோன்கள் பறக்க தடைவிதித்திருந்தனர். இந்த உத்திர வினை வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் வரை, 96 மணி நேரத்திற்கு ஒரு முறை உத்திர வினை பிறப்பிக்க மாநகர காவல் துறை திட்டமிட்டுள்ளனர்.