கேஸ் கசிவால் தீ விபத்து நகை பட்டறை உரிமையாளர் கைது
கோவை, நவ.14- போத்தனூர் அருகே சமையல் எரிவாயுவால் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்தவர் அஸ் பரலி. இவரது மனைவி சல்மஜபின் (36). இவருக்கு ஆர்.எஸ். புரம் தியாகி குமரன் வீதி பகுதியில் சொந்தமாக வீடு உள் ளது. இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த முஜபர் உசைன் (35) என்பவர் வாடகைக்கு குடியிருந்து, நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில், முஜபர் உசைன் வழக்கம்போல சமைப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத் துள்ளார். ஏற்கனவே அறையில் கேஸ் கசிவு ஏற்பட்டிருந்த தால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் தீயில் கருகி சேதமானது. மேலும், வீட்டின் மேற் கூரை முழுவதும் சேதமானது. இதில், முஜபர் உசைன் வெளியே சென்றதால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி னர். ஆனால், பக்கத்து அறையில் தூங்கிகொண்டிந்த அவரது நண்பர் பிஜாய்-க்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்த தால் கேஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டதாக முஜபர் உசைன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை போலீசார் தீவிர விசாரணை
மேட்டுப்பாளையம், நவ.14- மேட்டுப்பாளையத்தில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஆசிரியர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தனி யார் பள்ளி ஆசிரியையான யமுனா (52). இவர் நவ.4 ஆம் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு நடூர் பகுதியிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதேபோல் யமுனா வின் வீட்டின் அருகே வசித்து வருபவர் எலிசா. இவரும் தனது வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், ஞாயிறன்று நள்ளி ரவில் அடையாளம் தெரியாத நபர்கள் யமுனாவின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதனுள் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி யுள்ளனர். இதன்பின் எலிசாவுக்கு சொந்தமான வீட்டின் கத வின் பூட்டை உடைக்க முயன்றும் முடியாததால் அடுத்த தெரு வில் உள்ள நகைக்கடை அதிபர் முகமது மொய்தீன் (47) என்பவரின் வீட்டிற்கு திருட சென்றுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க வளாகத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை இரும்பு கம்பியால் உடைத்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு முகமது மொய்தீன் விழித்து குரல் எழுப்பவே திருடர்கள் இருளில் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த தக வல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீ சார் நகை கடை அதிபர் முகமது மொய்தீன் வீட்டு வளாகத் தில் பொருத்தப்பட்டிருந்த மற்றொரு கண்காணிப்பு கேமரா வில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.. அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உரு வாக்கியுள்ளது.
மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கல்
நாமக்கல், நவ.14- புதுச்சத்திரம் அருகே மானிய விலையில் விவசாய இடுபொருட்களை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் திங்களன்று வழங்கினார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏளூர் சமுதாய கூடத்தில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், வேளாண்மைத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு 100 சதவிகித மானிய விலையில் இடுபொருட்களை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் வழங்கி, பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயிர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்தை பார்வையிட்டார். இதில், வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.துரைசாமி, துணை இயக்குநர் ராஜகோபால், அட்மா குழுத்தலைவர் கே.துரை, ஏளுர் ஊராட்சி மன்ற தலைவர் யசோதா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா
நாளை துவங்குகிறது
ஈரோடு, நவ.14- விடியல் சமூக நல அறக்கட்டளை சார் பில் 9 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா நவ.16 ஆம் தேதியன்று (நாளை) துவங்கி, நவ.20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து விடியல் சமூக நல அறக் கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி யிருப்பதாவது, இளைய தலைமுறை மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்கும் வண்ணம் விடியல் சமூக நல அறக் கட்டளை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9 ஆம் ஆண்டு புன்செய் புளி யம்பட்டி புத்தகத் திருவிழா நவ.16 ஆம் தேதியன்று (நாளை) முதல் நவ.20 ஆம் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி மஹாலில் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். கண்காட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங் கில புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப் படுகிறது. அனைத்து புத்தகத்திற்கும் 10 சத விகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், தினசரி மாலை 6:30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத் தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்கள். நவ.16 ஆம் தேதியன்று (நாளை) திரைப்பட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், நவ.17 ஆம் தேதியன்று திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக் கூர் ராமலிங்கம் ஆகியோரும், நவ.18 ஆம் தேதியன்று கவாலியர் மதிவாணன், நவ.19 ஆம் தேதியன்று திரைப்பட கலைஞர் கவி ஞர் ஜோ மல்லூரி, நவ.20 ஆம் தேதியன்று எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் திரைப் பட கலைஞர் தாமு ஆகியோர் உரையாற் றுகின்றனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கோவை, நவ.14- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நவ.27 ஆம் தேதியன்று பொள்ளாச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை யில் நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன் பேசுகை யில், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நவ.27 ஆம் தேதியன்று நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளை ஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) சேர்த்து 102 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. 50 அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளை போல ஆட்டோமிசின், ரோபோடிக் பயிற்சிகள் வழங்கும் நவீனமான தொழிற்பயிற்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
பள்ளி வாகனத்தில் சிக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பலி
ஈரோடு, நவ.14- அந்தியூர் அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், ஆனந்தம்பாளையத் தைச் சேர்ந்தவர் மாதையன் - தங்கமணி தம்பதி. இவர்களுக்கு 13 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் திவாகர் (13) அம்மாபேட்டையை அடுத்த பூதப் பாடியில் உள்ள புனித இன்னாசியார் அரசு உதவி பெறும் பள் ளியில் எட்டாம் வகுப்பு பயன்று வந்தார். இந்நிலையில், திங்க ளன்று காலை தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தில் திவாகர் சென்று கொண்டிருந்தார். கோனேரிப் பட்டி கதவணை நீர்மின் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராமல் வளைவில் திரும்புகையில் வாகனத்திலிருந்து திவாகர் வெளியே வந்து விழுந்தார். அப்போது, வாகனத்தின் பின் சக்கரம் திவாகர் மீது ஏறியதில், உடல் நசுங்கி திவாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருளர் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா
தருமபுரி, நவ.14- தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் நடைபெற் றது. இதில், அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம் பாடி கிராமத்தைச் சேர்ந்த தகுதியுள்ள 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கி னார். உடன் கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தீபனா விஸ் வேஸ்வரி, மாவட்ட வரு வாய் அலுவலர் சு.அனிதா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
வாலிபர் சங்க உறுப்பினர் சேர்ப்பு துவக்கம்
திருப்பூர், நவ. 14 - திருப்பூரில் மயானத்தில் வேலை செய்யும் இளைஞரை முதல் உறுப்பினராக பதிவு செய்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூரில் உறுப்பினர் பதிவு இயக் கத்தைத் தொடங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு மாநகர குழுவின் சார்பில் ஞாயிற்றுகிழமை உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கரு மாரம்பாளையம், கோல்டன் நகர், குமரானந்தபுரம் (தெற்கு), குமரானந்தபுரம் (கிழக்கு), முருங்கப்பாளையம், திருமலை நகர், எஸ்.வி காலனி உள்ளிட்ட ஏழு கிளைகளில், 13 குழுக் களாக, 75க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு துவங்கி, அவ்வப்போது மழை குறுக் கிட்டாலும் மாலை 6 மணி வரை விடாமல் தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்தினர். வடக்கு மாநகரப் பகுதியில் 3 ஆயிரத்து 510 இளைஞர்கள், இளம் பெண்களை உறுப் பினர்களாக இணைத்துள்ளனர். இந்த உறுப்பினர் பதிவில் மாவட்ட செயலாளர் செ. மணிகண்டன், முன்னாள் நிர்வாகிகள் துரை சம்பத், எம். ஜீவானந்தம், செந்தில், பொன்.பாலகுமாரன் மற்றும் மாநகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிசிடிவி கேமிரா பொருத்துதல் திருப்பூரில் இலவச பயிற்சி
திருப்பூர், நவ. 14 - திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங் களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு திருப்பூர்- அனுப்பர்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கு வதற்கு இலவச பயிற்சி வகுப்பு 13 நாள்கள் நடைபெறும். இந்த முழு நேரப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள முன்பதிவு நடை பெறுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி யின் முடிவில் ஒன்றிய அரசின் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி : 9952518441, 86105 33436, 9489043923 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். ஆன்லைன் முன்பதிவிற்கு http://tinyurlcom/4z2274t6 இந்த தகவலை, பயிற்சி நிலைய இயக்குநர் ஜே.பூபதி ராஜா தெரிவித்துள்ளார்.
நிலக்கடலை ரூ.28 லட்சத்திற்கு ஏலம்
அவிநாசி, நவ.14- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.28 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத் திற்கு 750 மூட்டைகள் நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 7,700 முதல் ரூ.7,850 வரை யிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றா வது ரக நிலக்கடலை ரூ. 6,900 முதல் ரூ.7,050 வரை யிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.28 லட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 10 வியாபாரிகள், 88 விவசாயிகள் பங்கேற்றனர்.
இலவச மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு
தருமபுரி, நவ.14- இலவச வீட்டுமனைபட்டா கேட்டு சூடனூர் கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பலருக்கு சொந்த வீடு, விவசாய நிலம் இல்லை. உள்ளூரிலும், வெளியூரிலும் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். வீடு இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக சேர்ந்து வசித்து வருகின்றனர். மேலும், சிலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். குறைந்த வருவாயில் குடும்பம் நடத்தி வரும் இம் மக்கள் சொந்த வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே, இலவச மனைபட்டா வழங்கி, அரசு வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.
தலித் மக்களுக்கு எதிராக கிராம நிர்வாகம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆட்சியரிடம் புகார்
ஈரோடு, நவ.14- அந்தியூர் அருகே கூலிவலசு என்ற கிராம நிர்வாகம் தலித் மக்களுக்கு எதிராக செயல் படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய் யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வேம்பத்தி கிராமத்திற்குட்பட்டது கூலிவலசு. இங்கு 250க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இந்த குடியி ருப்பிற்கு கிழக்கே உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர், இவரது விவ சாய நிலத்திற்குச் செல்ல தலித் குடியிருப் பின் நடுவே சென்று வருகிறார். வண்டி வாக னங்கள் அவ்வழியே செல்வது அப்பகுதி மக் களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் இடை யூறாக உள்ளது. இதனை அம்மக்கள் கடுமை யாக ஆட்சேபித்த போதும், தொடர்ந்து அவர் களுக்கு இடையூறாக உள்ளார். மேலும், தலித் மக்கள் கோயிலை புதுப்பிக்கும் பணி யில் ஈடுபட்டபோது, அர்ச்சுனன் மினி டெம் போவை குறுக்கே நிறுத்தி சாதியைச் சொல்லி திட்டி பராமரிப்பு பணியைத் தடுத்துள்ளார். மீறி செய்தால் சுற்றுவட்டாரத்தில் எங்கும் நட மாட முடியாது என மிரட்டியுள்ளார். இதற்கி டையே அவரது நிலத்தை அளவீடு செய்து அதில் காட்டப்பட்டுள்ள வண்டித்தடத்தை பயன்படுத்தாமல், தலித் குடியிருப்பிற்குள் தடம் கேட்பதையும், தண்ணீர் செல்லும் பள் ளத்தில் வண்டித்தடம் போடவும் ஊராட்சி நிர் வாகம் முயற்சிக்கிறது. கிராம நிர்வாக அலு வலரும் அவருக்கு உடந்தையாக செயல் படுகிறார். தனி ஒருவருக்கு நில அளவை செய்ய கிராம நிர்வாகம் பணம் செலுத்த வேண்டும் என்பதை கைவிட வேண்டும். தலைமுறை களாக வணங்கி வரும் கோயில் பராமரிப்பில் இடையூறு செய்யக்கூடாது. ஊருக்கு நடு வில் விவசாய நிலத்திற்கு செல்லும் வாகனங் களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.அண்ணாதுரை, முருகன் மற் றும் அப்பகுதி மக்கள் சார்பாக சித்தன் ஆகி யோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகாரளித்தனர்.
சூலூரில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி
சூலூர், நவ.14- கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியன் பிட்னஸ் பெடரே ஷன் அமைப்பு சார்பாக தென்னிந்திய அளவிலான “மஸ்குல் மேனியா 2022” என்ற பெயரில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் மற்றும் கட்டுமஸ்தான அழகி தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெகநாதன் செய்தியாளர்களிடம் கூறு கையில், நவ.27 ஆம் தேதியன்று இந்த போட்டி நடைபெற இருக்கிறது. ஓபன் போட்டி என்பதால் தென்னிந்தியாவைச் சேர்ந்த பலர் பங்கேற்க உள்ளனர். 300க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்க உள்ளனர். நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒவ் வொருவரும் 10 நிமிடங்களுக்கு மிகாமல் தங்களுடைய கட்டு மஸ்தான உடல் அழகை காட்ட வேண்டும். வயது மற்றும் எடை அடிப்படையில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் அதே போன்ற நடைமுறையில் போட்டி நடைபெற இருக்கிறது, என்றனர்.
10 ஆம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு அழைப்பு
ஈரோடு, நவ.14- நடப்பு கல்வியாண்டிற்கான (ஏப்ரல் 2023) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருக்கும் நேரடித் தனித்தேர்வர்களும், 2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி யுற்றவர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப் பில் சேர பெயர்களை பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. அனைத்து தனித்தேர்வர்களும் செவ்வாய் (இன்று) முதல் 25.11.2022க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள் ளப்பட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செய் முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்ற பின்னர் இத்துறையால் தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக http://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 15.11.2022 முதல் 25.11.2022 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் 25.11.2022க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
வாலிபர் பலி
நாமக்கல், நவ.14- பரமத்தி அருகே உள்ள கோனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவீன் (20). இவர் வேலகவுண்டம் பட்டி அருகே கூலி வேலைக்கு சென்றுவிட்டு, தனது இருசக் கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நாமக்கல் சாலையில் தனி யார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது, அடை யாளம் தெரியாத வாகனம் ரவீன் மீது மோதிவிட்டு நிற் காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.