பொதுமக்கள் எதிர்ப்பு சேலம், மார்ச் 10- சேலம் மாநகர குடியிருப்புப் பகு தியில் குப்பை அரைக்கும் தொழிற் சாலை அமைக்க அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். சேலம் மாநகராட்சி, 21 ஆவது வார்டுக்குட்பட்ட அரியகவுண்டாம் பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இதில், அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதி களும் இல்லாத நிலையிலும்கூட பல குடும்பங்கள் இங்கு வசித்து வரு கின்றன. இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குடி யிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு, அங்கு குப்பை அரைக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குடியிருப்புப் பகு திக்கு அருகாமையில் உள்ள குப்பை கிடங்கினால் கொசு, வண்டு மற்றும் ஈக்களின் தொல்லை அதிக ளவில் இருப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந் தித்து வருகின்றனர். மேலும், குப்பை அரைக்கும் தொழிற்சாலை யும் இப்பகுதியில் கொண்டு வந் தால், சுகாதார சீர்கேடு மோசமடை யும் என அப்பகுதி மக்கள் அச்ச மடைந்துள்ளனர். எனவே, 40 ஆண்டுகளாக இப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். காலியாக உள்ள புறம் போக்கு நிலத்தில் மக்களுக்கு பய னுள்ள வகையில் சிறுவர் பூங்கா, நியாய விலைக்கடை, ஆரம்ப சுகா தார நிலையம் ஆகியவை அமைக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.