திருப்பூர், அக்.28- திருப்பூர் 53 ஆவது வார்டில் ஒரு மாதத்திற்கு மேல் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டுக்கு உட்பட் பொங்க லூர் செல்லும் சாலையில் ஒரு மாதத்திற்கு மேல் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக வரும் தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது . இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கு மாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.