திருப்பூர், டிச.1- காங்கேயத்தில் தள்ளுவண்டிக் கடையில் உணவருந்திவிட்டு காசு தரா மல் கடைக்காரரைத் தாக்கிய இந்து முன்னணியினரை உடனே கைது செய்ய வலியுறுத்தி வரும் டிச.4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, காங்கேயம் அமைதிக்கான ஒருங்கி ணைப்புக்குழு வெள்ளியன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கேயம் திருப்பூர் சாலை சாலை யோரத் தள்ளுவண்டிக் கடையில் உணவு உண்டு விட்டுக் காசு தராமல் தாக்குதலை நடத்திய இந்து முன்ன ணியைச் சேர்ந்த சதீசு, நாகராசு ஆகிய இருவர் மீது காங்கேயம் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இது வரை கைது செய்யவில்லை. மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்ன ணியைச் சேர்ந்த அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அனைவரையும் கைது செய்ய வேண் டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் கடையை மீண்டும் அதே இடத்தில் வரும் டிச.4 ஆம் தேதி திறப்பு விழா டத்துவது. காங்கேயம் காவல்துறை யினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல், வழக்குப்பதிவு செய்யப் பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும். தாக்குதல் நடத்திய இந்து முன்னணியி னரை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் வரும் டிச.4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு காங்கேயம் நகரப் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் காங்கேயம் அமைதிக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தற் சார்பு விவசாயிகள் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப் புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.