சேலம், மே 19- புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கேங் மேன் பணியாளர்கள் இடம்பெறாதது கண் டித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சேலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கேங்மேன் பணியாற்றும் ஊழியர்கள் இடம்பெற வில்லை. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத் தில் சேர்க்க வேண்டும். மேலும், தேர்வு செய் யப்பட்ட பகுதி நேர ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின்சார வாரி யத்தில் அவுட்சோர்சிங் முறையை கடைபிடிக் கும் வாரிய உத்தரவு எண் 2ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உடையாபட்டி பகுதியில் உள்ள மின்சார வாரியம் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு சிஐடியு சேலம் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சங்க தலை வர் கருப்பண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை களை விளக்கி செயலாளர் ரகுபதி சிறப்புரை யாற்றினர். சங்க பொருளாளர் பழனிசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.