இந்தியா கூட்டணியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்திற்கு, கோவை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், வெண்மணி, பொறியாளர் செந்தில், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, ததீஒமு கோவை மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ், ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரத்தினகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.