கோவை, பிப்.24- நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள், கல்வி நிலையங் களை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்க ளுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாந கராட்சியில் போட்டியிட்ட 12 ஆவது வார்டு உறுப்பினர் வி. இராமமூர்த்தி, 24 ஆவது வார்டு ஆர்.பூபதி, 13 ஆவது வார்டு என். சுமதி, 28 ஆவது வார்டு கண்ணகி ஜோதிபாசு ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதேபோல், காரமடை நகராட்சி 1 ஆவது வார்டில் ரா. பிரியா, பெரியநாயக்கன் பாளை யம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் என்.சிவராஜ், 1 ஆவது வார்டில் உமாதேவி, இருகூர் பேரூராட்சி 8 ஆவது வார்டில் ஸ்டாலின்குமார், 3 ஆவது வார்டில் ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், அன்னூர் பேரூராட்சி 8 ஆவது வார்டில் முகமது முசீர், 5 ஆவது வார்டில் மணிகண்டன், சூலூர் பேருராட்சி 7 ஆவது வார்டில் எம்.வேலுச்சாமி, இடி கரை பேருராட்சி 13 ஆவது வார் டில் கற்பகம் குப்புராஜ், வேட்டைக் காரன் புதூர் 15 ஆவது வார்டில் எஸ்.சாத்துக்குட்டி ஆகியோர் வெற்றி பெற்று மன்ற உறுப்பினர் களாக பொறுப்பேற்க உள்ளனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கள் வியாழனன்று காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்து கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர் களுக்கு தலைவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர். இதனைத்தொடர்ந்து ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் கோவை மாவட்டத்தின் முடிவு களை தமிழகத்தின் அரசியல் நோக் கர்கள் உற்று நோக்கிக் கொண்டி ருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்த லில் பத்து சட்டமன்ற தொகுதி களையும் நாங்கள் வென்றோம். உள்ளாட்சி தேர்தலிலும் அனைத் தையும் நாங்கள்தான் வெல்வோம், என்கிற மமதையோடு அதிமுக வும், நாங்கள்தான் எல்லாம் என் கிற வெற்று கொக்கரிப்போடு பாஜக வும் இருந்தது. ஆனால், தமிழ கத்திலேயே கோவை மாநகராட்சி யில் மிக குறைந்த அளவிற்கு 3 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதேபோல், மாநகராட்சியில் ஒரு இடங்களி லும் கூட வெற்றி பெறாதது மட்டு மல்லாமல், 86 வார்டுகளில் பாஜக டெபாசிட் இழந்தது. அதேநேரம், கோவை மாநகரம் திமுக கூட்ட ணிக்கு வெற்றியை அள்ளி வழங்கி யுள்ளது. மாநகராட்சியில் மட்டு மல்லாது, நகராட்சி, பேரூராட்சி களிலும் திமுக கூட்டணி மாபெ ரும் வெற்றியை பெற்றுள்ளது.
அத்தகைய வெற்றியை ஈட்டி வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியாளர்களுக்கு கட்சியின் மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கி றேன். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி என்பது மிகப்பெரியது. நேரிடையாக மக்களை சந்திப்ப தில் சிரமம் உள்ளது. ஆனால், அன் றாடம் மக்களோடு இருப்பவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை பெற்றுள்ள நமது கட்சியின் உறுப்பினர்கள் மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தமது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களை மேம்படுத்துவது, தரம் உயர்த்து வதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அதேபோன்று அனைத்து குடும்பங்களிலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதும், எளிய குடும்பத் தினர் வீட்டு பிள்ளைகளின் கல் விக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அனைவருக் கும் கல்வி என்கிற இலக்கில் கவ னம் செலுத்தினால் அது சம்பந்தப் பட்ட குடும்பத்தை அடுத்த உயரத் திற்கு கொண்டு செல்ல பேரூதவி யாக இருக்கும். அத்தகைய உன் னதமான பணிகளை புதியதாக பொறுப்பேற்க உள்ள மன்ற உறுப் பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.