districts

img

அருந்ததியின மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்திதரக்கோரி மனு

பொள்ளாச்சி, மே 23- பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துக்குளி  கிராமத்தில் அருந்ததியர் சமுதாய மக்க ளுக்கு மயான வசதியை ஏற்படுத்திதரக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் சார் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதொடர்பாக வாலிபர் சங்கத்தின்  பொள்ளாச்சி தாலுகா துணை செயலாளர் மணியாழன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சி  வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது நல்லூத்துக்குளி கிராமம். இப்பகுதியி லுள்ளஅருந்ததியர் காலனியில் 100க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மயான வசதி ஏற்படுத்தப்பட வில்லை. மாறாக, ஆற்றங்கரையோரம் உள்ள குறுகிய இடத்தில் மட்டுமே பிரேதங் களை புதைத்து வருகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் இருபிரேதங்கள் புதைப்பது என்பது இயலாது என்கிற அவலம் நிலை பல  ஆண்டுகளாக இருந்துவருகிறது. எனவே போர்காலஅடிப்படையில் உட னடியாக வருவாய்த் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு, நில அளவை செய்து  மயானத்திற்கான இடவசதி செய்து தர வேண்டும். மேலும் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள பொது கழிப்பிடம் மற்றும் மழைநீர்  வடிகால், சிமென்ட் சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்திட வேண்டும் என  மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இம் மனுவினைபெற்றுக் கொண்டபொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும்என உறுதியளித்தார்.  ஊராட்சி தலைவரிடம் மனு இதேபோல், மயானம், பொதுகழிப்பி டம், சிமென்ட் சாலை, மழைநீர் வடிகால் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி  தரக்கோரிவாலிபர் சங்கத்தின் நல்லூத்துக் குளி கிளை செயலாளர் எஸ்.அழகர் தலை மையில் நல்லூத்துக்குளி கிராம ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இம் மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற  தலைவர், மனுவின் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது வாலிபர் சங்கநிர்வாகிப.ராமகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.