districts

img

மக்களவை தேர்தல் நிதியளிப்பு

சேலம், ஏப்.3– மார்க்சிஸ்ட் கட்சியின் மேச்சேரி ஒன்றி யக்குழு சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 லட்சம்  ஒப்படைக்கப்பட்டது. தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட்  கட்சியின் முன்னணி ஊழியர் கூட்டம், சிபிஎம்  மேட்டூர் - கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.வசந்தி தலைமையில் மேச்சேரி, எற குண்டப்பட்டியில் நடைபெற்றது. தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி ஆகியோர் பேசி னர். இதில், தருமபுரி மக்களவை தொகுதி யில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.மணியின் வெற்றிக்கு முழுவீச்சில் பணியாற்றுவது. கட்சி கிளைகள்  மற்றும் வெகுஜன அமைப்புகள், கிளைகள் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது என் றும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொ டர்ந்து, மேச்சேரி ஒன்றியச் செயலாளர் ஜி. மணிமுத்து, மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜாவிடம், மேச்சேரி ஒன்றிய மக்க ளவை தேர்தல் நிதி இலக்கு ரூ.1 லட்சத்தை  நிறைவு செய்து வழங்கினார். இதில், சிபிஎம்  பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.