கோவை, டிச. 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் நடைபெற்ற நகரக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் பங்கேற்ற சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், சிபிஎம் சூலூர் தாலுகா குழு அலுவலகத்திற்கான சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவக கட்டிட நிதி வழங்கப்பட்டது. பீளமேடு நகரக்குழுவிற்குற்பட்ட பாரதிபுரம், கட்சி அலுவ லகத்தில் பிளமேடு நகரக்குழு செயலாளர் பாண்டியன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மாநாபன், மாநிலக்குழு உறுப் பினர் எம்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, யு.கே.சிவஞானம் ஆகியோர் பங் கேற்று உரையாற்றினர். முன்னதாக இக்கூட்டத்தில், சூலூர் தாலுகா குழுவிற்கு புதிய அலுவலகம் (சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவகம்) கட்டுவது என முன்மொழியப்பட்டிருந்தது. இதனையேற்று சூலூரில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் முன்னணியினர் 34 பேர் 9.49. லட்ச ரூபாய் நிதி தருவதாக தாமக முன்வந்து உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக சூலூர் தாலுகா குழுவின் முன்னாள் செய லாளர் ஆறுமுகம் ரூ 25 ஆயிரத்தை கட்சியின் மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்களிடம் வழங்கப் பட்டது.