districts

img

சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு நிதி

கோவை, ஜூன் 4- மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி பி.சுந்தரம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரமும், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நிதி யையும் வழங்கியுள்ளார். 

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்த மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி சுந்தரம் கடந்த மே 30 ஆம்தேதி மின்வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது ஓய்வூதிய பணப்பயன்களில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 ஆயிரம் வளர்ச்சி நிதியாகவும், சிஐடியு நடத் தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை தெற்கு வட்ட கிளையின் வளர்ச்சிக்கு ரூ.10ஆயிரம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சங்க கட்டட நிதி ரூ.10 ஆயிரம் என ரூ.40 ஆயிரம் நிதியாக வழங்கினார். இந்நிதியை மார்க் சிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் பி.ஆர்.நட ராஜனிடம் வழங்கினர். 

முன்னதாக இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் யு.கே.சிவஞானம், சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை தெற்கு மைய கோட்ட தலைவர் சின்னத்தாய் மற்றும் மைய கோட்ட செயலா ளர் டி.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.