தருமபுரி, டிச.12- தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தி னர், கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்கு றுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர் களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். மருத்துவ காப் பீடு திட்ட மேல்முறையீடு விண்ணப்பங் களுக்கு செலவுத்தொகை வழங்க வேண் டும். பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய் வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பழனிசாமி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எம்.பெருமாள், மாவட் டப் பொருளாளர் கே.கேசவன், மாவட்ட துணைத்தலைவர் எம்.கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகிகள், பி.மோகன்ராஜ், எம்.கோபால், இ.கிருஷ்ணமூர்த்தி, எம். கார்த்திகேயன், கே.சின்னராசு ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். இதில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக ஓய்வூதியர் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.குப்பு சாமி, ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, ஊரக வளர்ச்சி ஓய்வூதி யர் சங்க மாநில துணைத்தலைவர் கே. ஆர்.அப்பாவு, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.கோபாலன், மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணி யன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
சேலம்
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் இ. கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் கோரிக்கை களை விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் சுரேஷ், அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூ தியர் நல அமைப்பின் மாநில உதவிச் செயலாளர் கே.ஆர்.கணேசன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல், பூங்கா சாலை அருகே அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கே.எஸ்.இளங்கோ வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.குப்பு சாமி கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பி. கே.ராமசாமி, எம்.காளியப்பன், கே. செல்வராஜ், டி.சையத் முஸ்தபா ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்தி பேசி னர். முடிவில், ஓய்வூதியர் சங்க மாவட் டப் பொருளாளர் பி.கே.பெரியசாமி நன்றி கூறினார்.
கோவை
கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.மதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன், மாவட்டச் செயலா ளர் கே.அருணகிரி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். முடிவில் பொரு ளாளர் நடராஜன் நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.